Shani Peyarchi Luck: சனிபகவானால் பொற்காலம் பெற்ற ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Peyarchi Luck: சனிபகவானால் பொற்காலம் பெற்ற ராசிகள்

Shani Peyarchi Luck: சனிபகவானால் பொற்காலம் பெற்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 03, 2024 06:35 AM IST

சனிபகவானால் ராஜயோக வாழ்க்கையை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

இது போன்ற போட்டோக்கள்

இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது, அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று சனிபகவான் உதயமாகின்றார். சனி பகவானின் உதயத்தால் ஒரு சில ராசிகள் பொற்காலத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி 

 

சனிபகவானின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். பண வரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி 

 

சுக்கிரனின் ராசியாக விளங்கக்கூடிய உங்களுக்கு சனிபகவானின் உதயம் சிறப்பாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி 

 

சனிபகவானின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. இத்தனை நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner