கும்பத்தில் அபூர்வ யோகம்.. 3 கிரகங்களால் பணமழை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கும்பத்தில் அபூர்வ யோகம்.. 3 கிரகங்களால் பணமழை

கும்பத்தில் அபூர்வ யோகம்.. 3 கிரகங்களால் பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 09, 2024 01:57 PM IST

சனி, சுக்கிரன் மற்றும் செவ்வாய் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

சனி, சுக்கிரன் மற்றும் செவ்வாய்
சனி, சுக்கிரன் மற்றும் செவ்வாய்

நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருபவர் செவ்வாய் பகவான். இவர் வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். 45 நாட்களுக்கு ஒரு முறை இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அனைத்து வித முன்னேற்றமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் சொகுசு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் ஏற்கனவே பயணம் செய்து வருகின்றார். சுக்கிர பகவான் வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு வருகிறார். ஒரு மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசிக்கு வருகிறார். 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அபூர்வ சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

சனி, சுக்கிரன், செவ்வாய் உள்ளிட்ட மூன்று கிரகங்களும் ஒரே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

மூன்று கிரகங்களும் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

மிதுன ராசி

 

சனி சுக்கிரன் மற்றும் செவ்வாய் 3 கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

 

3 கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு நல்ல பயணத்தை கொடுக்கப் போகின்றது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner