Guru Vagra Peyarchi 2024: ’அடிச்சா பாரு அப்பாயிண்ட்மண்ட் ஆர்டர்!அரசு வேலை ரெடி!’ கும்ப ராசி குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!
Guru Vagra Peyarchi 2024: பத்தாம் இடத்தை குருபகவான் பார்ப்பதல், உத்யோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். அரசு வேலை தேடுபவர்களுக்கும், அரசுத் தேர்வுகள் எழுதியவர்களுக்கும் வேலை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும்.

குரு பகவான் ஆனவர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை 119 நாட்கள் வக்ரம் பெற உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருக்கும்போது, ஜாதகர் சத்தியத்தின் பாதையில் செல்வார். கண்கள் மற்றும் முகத்தில் ஒரு பிரகாசமான தோற்றம் இருக்கும். ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார். இயற்கை சுபர் ஆக உள்ள குரு பகவான் பெருந்தன்மை குணத்திற்கு சொந்தக்காரர்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
குருவும், கும்ப ராசியும்
கும்ப ராசியை பொறுத்தவரை அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. 11ஆம் வீடான கும்பம் ராசியில் சனி பகவான் மூலத்திரிகோணம் அடைந்து உள்ளது. சனி பகவானின் பேராற்றல் நிறைந்த கும்ப வீட்டில் செவ்வாய் பகவான் தனது கர்ம பதிவை வெளிப்படுத்துவார்.
சனி வக்ரம் பெற்று உள்ள காலத்தில் கும்ப ராசிக்காரர்கள் கடன்கள் வாங்க கூடாது. சிறிய விபத்துக்கள் ஏற்படும். குரு வக்ர பெயர்ச்சி காலத்தில் கடன் தொல்லைகள், உடல்நலக் குறைபாடுகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த பொருளாதார நெருக்கடிகள் தீரும். வழக்கு உள்ளிட்ட சிக்கல்களில் இருப்பவர்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். புதிய நம்பிக்கை பிறக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் விலகும். வாழ்கை துணை உடன் இருந்த சிக்கல்கள் தீரும். தடைப்பட்டு இருந்த வெளிநாட்டு பயண சிக்கல்கள் தீரும்.
ஆராய்ச்சி துறைகளில் உள்ளவர்களுக்கு வெற்றிகள் குவியும். மன உளைச்சல்களில் இருந்தவர்களுக்கு பிரச்னைகள் முடிவுக்கு வரும். மனைவி வழியில் சொத்துக்கள் கிடைக்கும். பத்தாம் இடத்தை குருபகவான் பார்ப்பதல், உத்யோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். அரசு வேலை தேடுபவர்களுக்கும், அரசுத் தேர்வுகள் எழுதியவர்களுக்கும் வேலை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். தொழிலில் அற்புதமான ஞானம் கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மரியாதை கூடும். செல்வ செழிப்பு அதிகம் ஆகும்.
தந்தை வழியில் தன வசதிகள் அதிகரிக்கும். கும்ப ராசியில் உள்ள குழந்தைகளுடைய அப்பாவிற்கு பண வசதி பெருகும். ஒரு சிலருக்கு அரசு உத்தியோகம் அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆராய்ச்சி கல்வியில் உள்ளவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். சிலர் தொழில் மற்றும் கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். உறவுகள் உடன் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
வழிபாடு
குரு பகவான் வழிபாடு வாழ்கையில் மேன்மையை தரும். திருச்செந்தூருக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் வெற்றியை ஏற்படுத்தி தரும். ஆலங்குடி, தென்குடி திட்டை, சென்னை திருவள்ளி தாயம், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள காயரோகணேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் அடுத்த அகரம் கோயில், சிவகங்கை பட்டமங்கலம் வெள்ளியங்கி குருஸ்தலம், சோழவந்தான் குருஸ்தலம், குருவித்துறை போன்ற குரு பகவானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்ய சங்கடங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
