திருமணத்தடை.. திருமண வாழ்வில் பிரச்னையா? கவலைவேண்டாம் உச்சரிக்க வேண்டிய கேது மந்திரம்!
திருமணத்தடை.. திருமண வாழ்வில் பிரச்னையா? கவலைவேண்டாம் உச்சரிக்க வேண்டிய கேது மந்திரம் குறித்துப் பார்க்கலாம்.

வேத ஜோதிடத்தின்படி, கேது நிழல் கிரகமாகப் பார்க்கப்படுகிறார். மேலும் கேது மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் மட்டுமே எப்போதும் பிற்போக்கு நிலையில் இருப்பார்கள். கேதுவின் பெயர்ச்சி ஒருவருக்கு நல்லமுறையில் இருந்தால் ராசியினருக்குப் பாதிப்பு இருக்காது.
ஜாதகத்தில் கேது தோஷங்கள் இருந்தால் எதிர்பாராத பிரச்னைகள், திருமண வாழ்க்கையில் தடைகள், திருமணத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். இவற்றில் இருந்து விடுபட கேதுவின் மந்திரத்தைப் பாராயணம் செய்தால் பிரச்னைகள் இல்லாமல் போகும். தடைகள் விலகும்.
ஸ்கந்த புராணத்தில் கேது மந்திரம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு அவர்களின் ஜாதகச் சுழற்சியில் கேதுவின் கெடுபலன்களை கட்டுப்படுத்த இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், சவாலான சூழ்நிலை கூட நேர்மறையானதாக மாறும்.
வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் தீர கேது கால மந்திரம்:
தூம்ரகேதுர்வி வர்ணக தர்ம: ।
லோககேதுர் மஹாகேது: ஸர்வகேதுர்பயப்ரதா: । 1.
ருத்ர ருத்ரப்ரியோ ருத்ர க்ருகர்ம சுகந்த்ரக் ।
பலஸா தூமஸம்காஸா சித்ரயஜ்நஓபவிதத்ருக்
நட்சத்திரம் விமர்தோ ஜெயமார்தோ ஜைமின்ஏயோ க்ரஹாதிபா: ।
பஞ்சவின்ஸதி நாமானி கேதுர்ய: ஸததம் பாதத் । 3.
தஸ்ய நஷ்யந்தி பாதஷ்ஸாஸர்வா: கேதுப்ரஸத: ।
தாண்டன்யபஷூணாம் சபவேத் வ்ரத்வீர்நஸங்க: । 4.
கேது மந்திரத்தை பாராயணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
கேது மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பது எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது. இந்த சிறிய மந்திரம் ஆரோக்கியப் பிரச்னைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களை ஒழிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
தினமும் இதை பாராயணம் செய்தால் தீய பயம் நீங்கும். மனம் அமைதியாக இருக்கும். எந்த கடினமான சூழ்நிலையிலும் தைரியமாக இருப்பீர்கள். இது பிரச்னைகளைச் சமாளிக்க உங்களுக்கு உதவும்.
கேதுவின் நேர்மறை ஆற்றல்களும் ஆசீர்வாதங்களும் கிடைக்கும். ஆன்மிக அறிவு மேம்படும். ஜோதிடத்தின் படி, மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவர்களில் அஸ்வினி, மகம் நட்சத்திரங்களில் கேதுவும் ஒரு ஆட்சியாளர்.
எனவே, இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கேது மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பெரும் பலன்களைப் பெறுகிறார்கள். கேதுவை சமாதானப்படுத்த இந்த மந்திரத்தினை பாராயணம் செய்யலாம். இது நமக்கு நடக்கும் மோசமான விளைவுகளை அப்புறப்படுத்துகிறது.
எப்படி, எப்போது பாராயணம் செய்ய வேண்டும்?
இந்த கேது மந்திரத்தைப் பூஜைக்குப் பிறகு அல்லது காலையிலேயே பாராயணம் செய்யலாம். உங்களை தொந்தரவு செய்யாமல் உட்கார வசதியான இடத்தைத் தேர்வு செய்துகொள்ளவும். தியான நிலையில் அமர்ந்து முழு பக்தியுடன் கேது மந்திரத்தைப் பாராயணம் செய்யவும். ஒவ்வொரு வார்த்தையும் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும்.
மனதை ஒருமுகப்படுத்தி ஓத வேண்டும். இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்யும் போது, கண்களை மூடி பகவானுடன் இணைய முயற்சி செய்யுங்கள். கேதுவின் தீய விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் கேது மந்திரத்தைப் பாராயணம் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நிதிப் பிரச்னைகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் நீங்கி, திருமண வாழ்வு செழிக்கும்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்