'விஷு கனி காணும் நிகழ்வு முதல் கைநீட்டம் வரை’: விஷு பண்டிகை குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  'விஷு கனி காணும் நிகழ்வு முதல் கைநீட்டம் வரை’: விஷு பண்டிகை குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

'விஷு கனி காணும் நிகழ்வு முதல் கைநீட்டம் வரை’: விஷு பண்டிகை குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

Marimuthu M HT Tamil Published Apr 13, 2025 02:44 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 13, 2025 02:44 PM IST

விஷு 2025: விஷு என்பது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகையாகும். இது சூரியன் மேஷ ராசிக்கு மாறுவதையும் குறிக்கிறது.

'விஷு கனி காணும் நிகழ்வு முதல் கைநீட்டம் வரை’: விஷு பண்டிகை குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!
'விஷு கனி காணும் நிகழ்வு முதல் கைநீட்டம் வரை’: விஷு பண்டிகை குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

இது போன்ற போட்டோக்கள்

இந்திய ஜோதிடத்தின்படி, இந்தப் பண்டிகை புதிய தொடக்கங்களையும் சூரியன் மேஷ ராசிக்கு மாறுவதையும் சுட்டிக்காட்டுகிறது. அதனால்தான் இது மலையாள மாதமான சிம்ஹ மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் "விஷு" என்ற வார்த்தைக்கு "சமம்" என்று பொருள்.

இந்த ‘விஷு’ பண்டிகை நாளில் இரவும் பகலும் சமமாக வரும் என்பது நம்பிக்கை. அத்தகைய சிறப்புமிக்க விஷு பண்டிகையின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

விஷு 2025 தேதி மற்றும் நேரங்கள்:

இந்த ஆண்டு, முக்கியமான விஷு பண்டிகை ஏப்ரல் 14, திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. டிரிக் பஞ்சாங்கத்தின்படி , விஷு கனி காணும் நிகழ்வை கடைப்பிடிப்பதற்கான நல்ல நேரம் அதிகாலை 03:30 மணி ஆகும்.

விஷு பண்டிகையின் வரலாறு:

விஷு பண்டிகைக்கு செழித்த வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகள் வெகுவாக கொண்டது. ஒரு புராணத்தின்படி, நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் வென்ற நாளுடன் இந்நாள் தொடர்புகொண்டது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு புராணத்தின்படி, ராவணன் ஒரு காலத்தில் சூரிய பகவான் கிழக்கில் உதயமாவதைத் தடுத்தான் என்றும்; ராவணனின் மறைவுக்குப் பிறகு, சூரிய பகவான் விஷு நாளில் தனது கிழக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது. இதனை சூரியனின் வெற்றிகரமான வருகையின் அடையாளமாக கூறுகின்றனர்.

விஷுவின் முக்கியத்துவம்:

மலையாள நாட்காட்டியின்படி, விஷு பண்டிகையானது, கேரளாவில் புத்தாண்டைக் குறிக்கிறது.

இந்தப் புத்தாண்டானது மலையாள மொழி பேசும் மக்களால் ஆழமான கலாசார, ஆன்மிக மற்றும் சமூக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

மேஷ சங்கராந்தி எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் இது விஷ்ணு மற்றும் கிருஷ்ணரை வழிபடுவதற்கு உகந்த நாளாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய ஜோதிட சுழற்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

விஷு பண்டிகையின் கொண்டாட்டங்கள் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளன. அவை விஷு கனி (மங்களகரமான பார்வை), விஷு கைநீட்டம் (பணம் பரிசளிக்கும் வைபவம்) மற்றும் விஷு பலம் (ஆண்டுக்கான ஜோதிட கணிப்புகள்).

விஷு சடங்குகள்:

விஷு கனி: விஷு பண்டிகைக்கு முதல் நாள் இரவு அரிசி, பழங்கள், காணிக்கொன்றை பூக்கள், நாணயங்கள், கண்ணாடி மற்றும் விளக்கு போன்ற பொருட்களை உருளி என்னும் ஒரு பித்தளை பாத்திரத்தில் வைத்திருப்பர். இந்த அமைப்புக்கு பெயர் விஷு கனி என்பர்.

முதல் பார்வை: விஷு பண்டிகையின்போது, குடும்ப உறுப்பினர்கள் கண்களை மூடிக்கொண்டு எழுந்து, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புக்காக முதலில் விஷு கனியை தரிசிப்பார்கள். இது விஷு கனி காணும் நிகழ்வு என அழைக்கப்படுகிறது.

ராமாயண வாசிப்பு: மஞ்சள் நிறத்திலான காணிக்கொன்றைப்பூக்களைப் பார்த்த பிறகு ராமாயணத்திலிருந்து வரும் வசனங்கள் சிலவற்றை வாசிப்பர்.

விஷு படகம்: விஷு பண்டிகையின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பட்டாசு வெடித்தல் நடைபெறும். இது விஷு படகம் என்று அழைக்கப்படுகிறது.

விஷு சத்யா: மலையாள மொழி பேசும் மக்களால், வாழை இலையில் அவியல், தோரணம், ரசம், பாயசம் போன்ற 20-30 உணவுகள் அடங்கிய பிரமாண்ட சைவ விருந்து பரிமாறப்படும், இது விஷு சத்யா எனப்படுகிறது.

விஷு கைநீட்டம்: விஷு கைநீட்டம் என்பது பெரியவர்கள் குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுக்கு பணம் அல்லது செழிப்புக்கான அடையாளங்களை ஆசீர்வாதமாகக் கொடுத்து பரிசாக வழங்குகிறார்கள். இது விஷு கைநீட்டம் எனப்படுகிறது.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்