காலபைரவர், நடராஜர் என சிவபெருமானின் 7 வடிவங்கள்.. அவற்றை பக்தர்கள் எவ்வாறு வழிபாடுகிறார்கள்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  காலபைரவர், நடராஜர் என சிவபெருமானின் 7 வடிவங்கள்.. அவற்றை பக்தர்கள் எவ்வாறு வழிபாடுகிறார்கள்?

காலபைரவர், நடராஜர் என சிவபெருமானின் 7 வடிவங்கள்.. அவற்றை பக்தர்கள் எவ்வாறு வழிபாடுகிறார்கள்?

Marimuthu M HT Tamil
Jan 04, 2025 08:05 PM IST

காலபைரவர், நடராஜர் என சிவபெருமானின் 7 வடிவங்கள்.. அவற்றை பக்தர்கள் எவ்வாறு வழிபாடுகிறார்கள்?

காலபைரவர், நடராஜர் என சிவபெருமானின் 7 வடிவங்கள்.. அவற்றை பக்தர்கள் எவ்வாறு வழிபாடுகிறார்கள்?
காலபைரவர், நடராஜர் என சிவபெருமானின் 7 வடிவங்கள்.. அவற்றை பக்தர்கள் எவ்வாறு வழிபாடுகிறார்கள்? (pinterest)

சிவன் ஒருவரல்ல, அவருக்கு தெய்வீக சக்திகள் உள்ளன. மிகவும் பிரபலமான ஏழு சிவ வடிவங்கள் குறித்தும், அவை எவ்வாறு வணங்கப்படுகின்றன, அவை ஏன் வணங்கப்படுகின்றன என்பது குறித்தும் பார்ப்போம்.

ஆணும் பெண்ணுமாக அர்த்தநாரீசுவரர்:

சிவனின் உடலில் பாதியையும், பார்வதியின் உடலின் மறுபாதியையும் கொண்டுள்ள சிவனின் ஒரு வடிவம் தான், அர்த்த நாரீசுவரர். இது ஆண் மற்றும் பெண்ணின் சக்திகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் குறிக்கிறது மற்றும் சமநிலையே வாழ்க்கையின் திறவுகோல் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

பக்தர்கள் வாழ்க்கையில் நல்லிணக்கத்தைக் கண்டறிவதிலும், வலிமை மற்றும் இரக்கத்தை சமநிலைப்படுத்துவதிலும் அர்த்த நாரீசுவரர் வழிபாடு பிராதனமானது.

அர்த்த நாரீசுவரருக்கு என இருக்கும் பிரத்யேகக் கோயில்கள் எதிர்மறையை இணைக்கும் சடங்குகளுடன் ஒற்றுமையைக் கொண்டாடுகின்றன. இதனால் பிரிந்த கணவன் - மனைவிமார்கள் இந்த ஆலயத்துக்கு வந்தால் ஒற்றுமையாக வாழ்வார்கள்.

பசுபதிநாத்:

பசுபதிநாத் என்னும் திருநாமம் கொண்ட சிவபெருமான் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பவர். நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயில் விலங்குகள் சுதந்திரமாக நடமாடும் இடமாகப் பார்க்கப்படுகிறது. விலங்குகள் மற்றும் இயற்கையின் பாதுகாப்புக்காக இந்தக் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

நடராஜர்:

சிவபெருமானை நடராஜர் வடிவில் பலமுறை பார்த்திருப்பீர்கள். அவரை பல வடிவங்களில் உருவாக்குகின்றனர். தென்னிந்தியாவில் நடராஜா என்னும் ரூபத்தில் சிவபெருமான் பல நாட்டிய நிகழ்ச்சியில் கொண்டாடப்படுகிறார்.

ருத்ர பகவான்:

சக்திவாய்ந்த ஸ்லோகங்கள் மற்றும் நெருப்பு சடங்குகள் மூலம் ருத்ர பகவான் வழிபடப்படுகிறார். கஷ்ட காலங்களில் வலிமைக்காக பக்தர்கள் ருத்ர பகவானை வணங்குகிறார்கள்.

காலபைரவர்:

சிவபெருமான் பல தலங்களில் காலபைரவராக காட்சி தருகிறார். நாயை தனது வாகனமாக சித்தரித்து கடும் காப்பாளராக, கால பைரவராக காட்சி தருகிறார். காலபைரவரை வழிபட்டால் பயம் நீங்கும். மனத் தெளிவு கிடைக்கும்.

பகீரதன்:

பகீரதன் வடிவில், சிவபெருமான் தனது கருணை பக்கத்தை வெளிப்படுத்தி கங்கை நதியை பூமிக்கு கொண்டு வருகிறார். இது கருணை மற்றும் சுத்திகரிப்பின் ஒரு வடிவமாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் தங்கள் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்த புனித நதிகளில், குறிப்பாக கங்கை நதியில் குளிக்கிறார்கள். அதனால், பகீரதன் வழிபாடு மனதையும் உடலையும் தூய்மைப்படுத்த உதவுகிறது.

சோமநாதர்:

சோமநாதர் என்பது தலையில் பிறை வடிவம் கொண்ட ஒரு சிவபெருமான் ஆவார். அவர் அமைதியான மற்றும் குளிர்ச்சியான ஆற்றலின் தனித்துவமான உருவகமாகப் பார்க்கப்படுகிறார். மன அமைதிக்காக சோமநாதர் வழிபடப்படுகிறார். மனக்குழப்பத்தில் இருக்கும்போது சோமநாதர் வழிபாடு செய்வது பிரதானமானது.

பொதுக்குறிப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்