Temple Special: உங்கள் வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றும் மங்கள சனீஸ்வரர்!
Mangala Saneeswarar Temple: வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றி சகல பலன்களை தரும் மங்கள சனி பகவானின் சிறப்புக்கள் பற்றி இங்கு காண்போம்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது விளங்குளம் கிராமம். இங்கே அமைந்துள்ளா ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் சனிபகவான் தனி சந்நிதியில் தம் தேவியரோடு ஆதிபிருஹத் சனீஸ்வரர் எனும் மங்கள சனீஸ்வரராக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியெங்கும் மகாபிரளயம் உண்டாகும். பூமியில் உள்ள உயிரினங்கள் மறைந்து மீண்டும் தோன்றும். அப்படியொரு பிரளய காலத்தின் முடிவில் பூமியில், மீண்டும் உயிரினங்கள் தோன்றவும். மனிதகுலம் தழைக்கவும் ஒரு வைகாசி மாத திருதியை நன்னாளில் பூவுலகில் விளங்குளம் கிராமத்தில் இறைவன் அட்சயபுரீஸ்வராக தோன்றினார் என்கிறது ஸ்தல புராணம்.
பிரளயம் முடிந்து மனித இனங்கள் தோன்றுவதற்கு முன்னரே, சனிபகவான் முதன் முதல் அமர்ந்த தலம் இது. பிருஹத் என்றால் பெரிதான என்று அர்த்தம். எனவே, ஆதியில் தோன்றிய பெரிய சனீஸ்வரர் என்று பொருள்படும்படி ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்றும் மங்கள சனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.