HT Yatra: கண்ணை இழந்த சுக்ராச்சாரியார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. வெள்ளீஸ்வரர் அமர்ந்தார்
Arulmigu Velleeswarar Temple: பல நூற்றாண்டுகள் கடந்தாலும் காலத்தால் அடிக்க முடியாத அளவிற்கு இன்றுவரை கம்பீரமாக பல கோயில்கள் நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்

Arulmigu Velleeswarar Temple: உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. உயிரினங்கள் பிறந்த காலத்தில் இருந்து இன்று வரை சிவபெருமானுக்கு என மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. மன்னர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை சிவபெருமானை குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
உலகம் முழுவதும் கோயில் கொண்டு சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தாலும் குறிப்பாக இந்தியாவில் திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த சேரன் சோழன் பாண்டியன் உள்ளிட்ட மன்னர்கள் நிலங்களுக்காக போரிட்டு வந்தாலும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளன. அது மட்டுமில்லாமல் தங்கள் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காக மிகப்பெரிய சிற்பங்கள் கொண்ட கோயில்களை அமைத்து சிவபெருமானுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.