சனி பகவானின் ஆசீர்வாதங்களை பெற வேண்டுமா? - சனி ஜெயந்தி நாளில் இதை செய்தாலே போதும்
சனி ஜெயந்தி நாள் சனி தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியும்.

ஜோதிடத்தில், சனி பகவான் ஒருவரின் கர்மாவை அப்படியே முழுவதுமாக கொடுப்பவராக கருதப்படுகிறார். சனி பகவான் ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மாவுக்கேற்ப பலன் தருவதால் அவரை கண்டு அனைவரும் பீதி அடைகிறார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
May 10, 2025 11:40 PMஇரு கிரகங்களின் சஞ்சாரம்.. உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்! வளர்ச்சி, நல்ல நேரத்தை அனுபவிக்கும் ராசிகள்
May 10, 2025 07:00 AMபண மழை ராசிகள் நீங்க தான் போல.. குரு கொட்டிக் கொடுக்க வருகிறார்.. உங்க ராசி இருக்கா?
ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சனி ஜெயந்தி என்றால் சனி பகவான் பிறந்த நாள் என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் மக்கள் சனி பகவானை மனதார வணங்கினால் அவரின் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.
சனி ஜெயந்தி இந்த ஆண்டு எப்போது
இந்த ஆண்டு, சனி ஜெயந்தி 2025 மே 27, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி பகவானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக சனி ஜெயந்தி இந்து மதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில பரிகாரங்கள் செய்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. சனி ஜெயந்தி அன்று சனி தேவனை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- சனி ஜெயந்தி நாளில் அதிகம் காலையில் உடல் மற்றும் மனம் தூய்மையுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
- சனி ஜெயந்தி நாளில் சனி தேவனுக்கு கடுகு எண்ணெய் வழங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், சனி பகவானின் தீய விளைவுகள் குறையும் என்று நம்பப்படுகிறது.
- சனி ஜெயந்தி நாளில், அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் விளக்கை வைப்பது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்ச்சியடைவார் என்று நம்பப்படுகிறது.
- சனி பகவானின் ஆசீர்வாதத்தைப் பெற, சனி ஜெயந்தி நாளில் கருப்பு ஆடைகள், குடைகள், உணவு மற்றும் இரும்பு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: உறவில் ஈகோ வேண்டாம்.. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.. விருச்சிக ராசிக்கு இன்றைய நாள் எப்படி?
- சனி ஜெயந்தி நாளில் சனி ஸ்தோத்திரம், சனி மந்திரம் மற்றும் சனி சாலிசா ஆகியவற்றை உச்சரிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், சனி பகவான் மகிழ்ச்சியடைந்து அவரது ஆசீர்வாதங்களை வழங்குகிறார் என்று நம்பப்படுகிறது.
- சனி ஜெயந்தி நாளில், ஹனுமானை வணங்க வேண்டும் மற்றும் சனி தேவரை மகிழ்விக்க ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் வெற்றி.. மேஷ ராசிக்கு இன்றைய நாள் எப்படி?
- சனி ஜெயந்தி நாளில், கருப்பு நாய்க்கு கடுகு எண்ணெயுடன் ரொட்டி கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்