Sani Peyarchi: சனிபகவானால் அதிர்ஷ்டம்.. 3 ராசிகளுக்கு பணமழை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Peyarchi: சனிபகவானால் அதிர்ஷ்டம்.. 3 ராசிகளுக்கு பணமழை

Sani Peyarchi: சனிபகவானால் அதிர்ஷ்டம்.. 3 ராசிகளுக்கு பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 06, 2024 09:39 AM IST

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

இது போன்ற போட்டோக்கள்

இவர் மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்த ராசியாகும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமான சனி பகவான் மார்ச் மாதம் உதயமாகின்றார். சனி பகவானின் உதயத்தால் சில ராசிகள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் உதிக்கின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் பெறும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்களோடு மகிழ்ச்சியான உறவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் உதயமாகின்றார். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் நடக்கும். மார்ச் மாதம் முதல் உங்களுடைய காலம் சிறப்பாக இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் சனி பகவான் ஏழாவது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பணவரவிலிருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணம் உங்களை தேடி வரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் ஆகாத அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner