குருவும் சுக்கிரனும் கலந்து விட்டனர்.. அதிர்ஷ்ட பணமழை உங்களுக்கு தான்.. யோக ராசிகள் யார்?
Guru and Venus: குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்கிறார் இது அவருடைய சொந்தமான ராசியாகும். இந்நிலையில் குரு மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேரப் போகின்றனர். இதனால் கேந்திர திரிகோண யோகம் உருவாகியுள்ளது.
நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் மே மாதம் மூன்றாம் தேதி என்று ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு மிகப்பெரிய இடமாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் இருந்து வருகிறது.
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் தன்னம்பிக்கை, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்கிறார் இது அவருடைய சொந்தமான ராசியாகும். இந்நிலையில் குரு மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேரப் போகின்றனர். இதனால் கேந்திர திரிகோண யோகம் உருவாகியுள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசி
குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டம் தேடிவரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணையால் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். இடத்தை காரியங்கள் அனைத்தும் வெற்றியாக மறுபடியும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
கடக ராசி
குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். கடன் தொல்லைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எந்த வேலையாக இருந்தாலும் வெற்றியாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்ம ராசி
குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உங்களுக்கு ராஜயோகம் உருவாகியுள்ளது. எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்து மட்டத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய செயல் நல்ல பாராட்டை பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. கடினமான காரியமாக இருந்தாலும் எளிதில் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய யோசனைகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9