கெட்ட காலம் தொடங்கும் அறிகுறிகள்.. சாணக்கியர் நீதி கூறும் அறிவுரை.. உஷாரா இருங்க மக்களே!
Chanakya Neeti: நமது வாழ்க்கையில் பயணம் செய்யும் பொழுது கெட்ட நேரம் தொடங்கிவிட்டது என்பதை கண்டறியக்கூடிய வழிகளை சாணக்கியர் கூறியுள்ளார். அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
Chanakya Neeti: மௌரிய பேரரசின் போது சந்திரகுப்த மௌரியரின் தலைமை ஆலோசகராக இருந்தவர் இந்த சாணக்கியர். விஷ்ணுகுப்தர் எனும் இவர் இரண்டு புத்தகங்களை எழுதி உள்ளார். ஒன்று அடுத்த சாஸ்திரம் மற்றொன்று சாணக்கிய நீதி. அரசியல் துறையில் மிகப்பெரிய அபார அறிவு கொண்டவர் சாணக்கியர். கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய தத்துவ ஞானி, பொருளாதார அறிஞர், அரசியல் அறிஞர் எனப் போற்றப்பட்டவர்.
சாணக்கியர் நமது வாழ்வோடு தொடர்பு உடைய பல விஷயங்களை எடுத்துக் கூறியுள்ளார். தனது நெறிமுறைகளில் இது குறித்து நிறைய தொகுத்துள்ளார். நமது வாழ்க்கையில் இலக்குகளை தோண்டக்கூடிய வார்த்தைகள் எத்தனையோ எழுதியுள்ளார்.
அதன் காரணமாக பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் நமது வாழ்க்கையில் பயணம் செய்யும் பொழுது கெட்ட நேரம் தொடங்கிவிட்டது என்பதை கண்டறியக்கூடிய வழிகளை சாணக்கியர் கூறியுள்ளார். அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
பெரியவர்களை அவமதித்தல்
சாணக்கியர் கூறுவது படி வீட்டில் இருக்கக்கூடிய மற்றும் வெளியே இருக்கக்கூடிய பெரியவர்களை அவமதிப்பது மிகவும் தவறான செயலாக கூறப்படுகிறது. குறிப்பாக வீட்டிற்குள் மகிழ்ச்சி தங்காது, அதேபோல செல்வம் உங்களைத் தேடி வராது. வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களை மதித்து பழகுவது உங்களுக்கு முன்னேற்றத்தை தரும் என கூறுகிறார்.
பூஜை செய்யாமை
பூஜையை அவசியமற்றதாக கருதப்படும் ஒருவர் வீட்டில் செல்வம் தங்காது மகிழ்ச்சி இருக்காது என சாணக்கியர் கூற்றுக் கூறுகிறது. ஒருவர் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்பட வேண்டும் என்றால் பூஜை என்பது மிகவும் அவசியமாகும். தினமும் வீட்டில் பூஜை செய்வதனால் உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் வருகை இருக்கும் எனக் கூறப்படுகிறது. தூசு படிந்து காணப்படும் பூஜை அறை கெட்ட சகுனத்தை உணர்த்துவதாக கருதப்படுகிறது. அதன் காரணமாக தினமும் பூஜை செய்வது மிகவும் அவசியமாகும் எனக் கூகூறுகிறார்.
சண்டை சத்தம்
ஒருவரது வீட்டில் எப்போதும் சண்டை மற்றும் சச்சரவுகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் லட்சுமிதேவி தங்க மாட்டார் என சாணக்கியர் கூற்று எடுத்துரைக்கின்றது. இதனால் பொருளாதாரத்தில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் மற்றும் நிதி நிலைமையில் மோசமான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. தேவையற்ற சண்டை மற்றும் சச்சரவுகளை குறைத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும் என கூறுகிறார்.
உடைந்த கண்ணாடி
வீட்டில் இருக்கக்கூடிய முகம் பார்க்கும் கண்ணாடி உடைவது கெட்ட சகுனத்தை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய கண்ணாடி உடைந்தால் யாருக்கேனும் சிக்கல்கள் வரப்போகின்றது என அர்த்தம். சணக்கில் கூற்றுப்படி கண்ணாடி உடைவதை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது என கூறுகிறார். உடைந்த கண்ணாடி கட்ட சகுனத்தை உணர்த்துவதாக கருதுகிறார்.
துளசி செடி வாடுதல்
மங்களகரமான செடியாக கருதப்படும் துளசி செடி வாடுவது வீடுகளில் கெட்ட நேரத்தை வரவழைப்பதாக சாணக்கியரின் கூற்று கூறுகிறது. கெட்ட காலத்துக்கு முன்கூட்டியே உணர்த்தக்கூடிய தாவரமாக துளசி செடி விளங்கி வருகிறது. எனவே வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடி வாடினால் உங்களுக்கு பொருளாதார சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கெட்ட சகுனத்தை உணர்த்தும் கருவியாக துளசி செடி விளங்கி வருகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.