வேட்டையனாக மாறிய செவ்வாய்.. மகுடம் சூடப் போகும் ராசிகள்.. பணத்தை வாரி கொள்ள தயாரா?.. வாங்க!
Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல பலன்கள் மற்றும் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் கோபத்தின் கிரகமாக கருதப்படுகிறார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி கொடுப்பார் என கூறப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 05:15 PMஅரசியல் அதிகாரம்: ’அரசியலில் குதிக்கும் ஜாதக அமைப்பு எது?’ உங்களுக்கு அரசியல் வருமா? இதோ முழு விவரம்!
May 15, 2025 04:50 PMபூஜை அறை வாஸ்து குறிப்புகள்: வாஸ்துப்படி வீட்டின் பூஜை அறை எந்த கலரில் இருக்க வேண்டும் தெரியுமா?
May 15, 2025 12:26 PMசூரிய பெயர்ச்சியால் பாதிப்பு.. எந்த ராசியினருக்கு சிக்கல், சோதனை காலம் தொடங்குகிறது?
May 15, 2025 11:41 AMஏழரை சனியால் எந்த 3 ராசிகளுக்கு சிக்கல்.. பாதிப்பை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!
May 15, 2025 10:16 AMபணமழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
May 15, 2025 09:52 AMராகு காலம் பொறக்குது.. ராகு காலம் பொறக்குது.. இந்த ராசிகள் மீது பண மழை கொட்ட போகுது!
செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல பலன்கள் மற்றும் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்ட காலத்தை தொடங்க போகின்றது. செல்வத்தின் அதிபதியாக நீங்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சாதகமாக அமையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது புதிதாக செய்யப்படும். முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம் ராசி
செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு சுபகாலமாக அமையப் போகின்றது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சாதகமாக செயல்படுவார்கள்.
அனைத்து விதமான நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
