Sani Peyarchi 2024: சனி உதித்து விட்டார்.. மார்ச் பணமழை இந்த ராசிகளுக்கு தான்
சனிபகவானால் சிறப்பான வாழ்க்கையைப் பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
சனிபகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாகின்றார். இவருடைய உதயமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சனி பகவானின் உதயத்தால் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் உருவாக உள்ளது. அனைத்து பலன்களும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
ரிஷப ராசி
சனி பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் இருந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்ம ராசி
சனி பகவானின் உதயத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் தேடி வரும். இத்தனை நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
துலாம் ராசி
சனி பகவானின் உதயம் உங்களுக்கு மங்களகரமாக அமைந்துள்ளது. வீட்டில் சுப பலன்கள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9