Guru Palangal: குரு புதையல் வந்துவிட்டது.. இந்த ராசிகள் கூத்தாட்டம்.. உதயத்தில் செல்வம் அதிகரிப்பு
Guru Palangal: குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பயணம் செய்து வந்த குரு பகவான் ரிஷப ராசியில் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமானார். இதுவரை தடைப்பட்டு கிடந்த நல்ல பலன்கள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் தற்போது கிடைக்கப் போகின்றது.

Guru Palangal: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 21, 2025 03:06 PMஇந்த 4 ராசிகளுக்கு துணையின் மீது நம்பிக்கை குறைவாக இருக்குமாம்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்க!
Mar 21, 2025 02:17 PMசனி பெயர்ச்சி பலன்: சனி வீட்டின் முன் நிற்கிறார்.. சொர்க்க வாசலை திறக்கப் போகும் ராசிகள்.. யாருக்கு யோகம்?
Mar 21, 2025 12:33 PMகுபேர குரு யோகம்: குரு உருவாக்கிய குபேர யோகம்.. பணத்தை அள்ளிச் சென்று வாழும் ராசிகள் யார்?.. தலைகீழாக மாறப் போகுதா?
Mar 21, 2025 12:25 PMLucky Moles : உங்கள் முகத்தில் உள்ள மச்சங்களை வைத்து நீங்கள் யார் என்பதை பார்க்கலாமா.. யார் அதிர்ஷ்டசாலிகள் பாருங்க!
Mar 21, 2025 11:46 AMசூரியனின் பெயர்ச்சி : அதிர்ஷ்ட காத்து இனி உங்க பக்கம்.. சூரிய பகவானால் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை மாறப் போகிறது!
Mar 21, 2025 10:01 AMசுக்கிர பெயர்ச்சி: உங்க ராசி என்ன சொல்லுங்க?.. சுக்கிரன் மீனத்தில் நுழைந்தார்.. அதிர்ஷ்டம் யாருக்கு வருகிறது?
குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு வந்தார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் இடமாற்றத்தில் குரு பகவான் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகத்தின் மாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் அமைந்துள்ளது.
குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பயணம் செய்து வந்த குரு பகவான் ரிஷப ராசியில் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமானார். இதுவரை தடைப்பட்டு கிடந்த நல்ல பலன்கள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் தற்போது கிடைக்கப் போகின்றது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குரு பகவான் உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் காதல் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உயர்கல்வி படிப்புக்காக மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கொடுக்கும். ஆசைகள் அனைத்தும் உங்களுக்கு நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மகர ராசி
உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகியுள்ளார். இதனால் குழந்தை தொடர்பான நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் முன்பு இருந்ததை விட தற்போது கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். ஜோதிடம் மற்றும் எழுத்து சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குரு பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பானதாக அமைய உள்ளது. சிந்தனையாளர்களுக்கு இது சாதகமான சூழ்நிலையாக அமையப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடும். செல்வத்தின் வருகை அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
