Rahu Luck: 2026 ராகு காலம்.. கும்பத்தில் நல்ல வாய்ப்பு.. 4 ராசிகள் மீது தேடி வரும் வரம்
Rahu Luck: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Rahu Luck: நவகிரகங்களின் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். அதனால் ராகு பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 24, 2025 08:41 AMதிடீர் லாபம் கொட்டோ கொட்டுனு கொட்டும்.. இந்த கிரக சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டமா.. வெற்றி உங்கள் பக்கமா பாருங்க!
Apr 24, 2025 07:44 AMதொட்டதெல்லாம் வெற்றி.. எந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட்.. மே மாதம் 6 கிரகங்கள் மாற்றத்தால் பண மழை யாருக்கு பாருங்க!
Apr 24, 2025 07:00 AMதுவாதஷ் யோகம்: உருவானது அபூர்வ யோகம்.. சனி செவ்வாய் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
Apr 24, 2025 05:00 AM‘வெற்றி தேடி வரும்.. சிறப்பான நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்’இன்று ஏப்.24 உங்க நாள் எப்படி இருக்கும்!
Apr 23, 2025 11:17 AMகுரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 23, 2025 07:30 AMராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
ராகு மற்றும் கேது இருவரும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராக பகவான் மீன ராசிகளின் நுழைந்தார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ராகு பகவான் வருகின்ற மே 18ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு கும்ப ராசியில் நுழைகின்றார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24 வரை இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
ராகு பகவானின் பல அனுகூலமான பலன்களை நீங்கள் பெறப்போகின்றீர்கள். நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். தந்தையின் உதவி உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை கிடைக்கும். அனைத்து விருப்பங்களும் உங்களுக்கு நிறைவேறும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மகர ராசி
ராகு பகவான் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான வழிகளில் இருந்து நல்ல பலன்களை கொடுக்கும். படத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திடீரென செல்வங்கள் தேடிவரும். உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய பண வரவு இருக்கும்.
புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்டகால நிதி சிக்கல்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். அதற்கான தீர்வுகள் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது.
கும்ப ராசி
ராகுபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். சனி பகவானின் ராசி நீங்கள் என்கின்ற காரணத்தினால் ராகு பகவான் உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார். பணவரவில் எந்த குறைவும் இருக்காது. குடும்பத்தில் இருந்து சண்டை மற்றும் சச்சரவுகள் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தரும். சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
