Sani Raja Yogam: சனி உருவாக்கிய ராஜயோகம்.. 3 ராசிகளுக்கு 2025 வரை பண மழை
சனி பகவானால் 2025 வரை யோகத்தை பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் மெதுவாக நகரக் கூடியவர். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் நுழைந்த பயணம் செய்து வருகின்றார். இதனால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த கேந்திர திரிகோண ராஜயோகம். அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பகவானால் உருவாக்கப்பட்ட இந்த ராஜயோகத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கும்ப ராசி
சனி பகவானின் ராஜயோகத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. நம்பிக்கை அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ரிஷப ராசி
சனிபகவானின் கேந்திர திரிகோண ராஜயோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்ட வேலைகள் சாதகமாக முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானத்தில் உயர்வு உண்டாகும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மிதுன ராசி
சனிபகவானின் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. இந்த ராஜயோகம் உங்களது ராசியில் ஒன்பதாவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் பணவரவில் எந்த குறையும் இருக்காது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
