Lord Mars: மகரத்தில் புகுந்த செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறுகின்ற ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: மகரத்தில் புகுந்த செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறுகின்ற ராசிகள்

Lord Mars: மகரத்தில் புகுந்த செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 10, 2024 03:01 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள் அந்த இடமாற்றமானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் தற்போதைய இடமாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

செவ்வாய் பகவான் தனுசு ராசிகள் பயணம் செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் மகர ராசி இடமாற்றத்தால் உயர்வை பெறப்போகும். ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டத்தின் யோகமும் கிடைக்க உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் லாபத்தோடு முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம். உங்களைத் தேடி வரும் நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner