குருவும் சுக்கிரனும் அஸ்தமனம்.. கஷ்டப்பட போகும் 3 ராசிகள்.. 24 ஆண்டுகள் சேர்க்கை..!
Guru and Venus: குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றனர். ரிஷப ராசியில் அஸ்தமான நிலையில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே ஏழாம் தேதி அன்று அஸ்தமன நிலையில் சுக்கிரன் ரிஷபத்தில் நுழைந்தார்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றிக் கொடியவர். இவருடைய இடமாற்றும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிரன். இவர் சொகுசு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றனர். ரிஷப ராசியில் அஸ்தமான நிலையில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே ஏழாம் தேதி அன்று அஸ்தமன நிலையில் சுக்கிரன் ரிஷபத்தில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களின் அஸ்தமன நிலை 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகம் கிடைத்தாலும் சிலர் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
குருவும் சுக்கிரனும் சேர்ந்து அஸ்தமன நிலையில் பயணிப்பது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பெரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும். சிறிய வேலைகளை முடிப்பது கூட மிகவும் கடினமாக இருக்கும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். உடன் வேலை செய்பவர்களால் பல்வேறு விதமான தடைகள் உண்டாகும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். அதிக செலவுகள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும்.
சிம்ம ராசி
குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமனம் உங்களுக்கு பல்வேறு விதமான சங்கடங்களை ஏற்படுத்த போகின்றது. குழந்தைகளால் உங்களுக்கு கவலைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிறைய பயணங்கள் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தராது. வேலை செய்யும் இடத்தில் பெரிய திருப்திகள் இருக்காது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையின் கருத்து வேறுபாடுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது மிகவும் நல்லது.
விருச்சிக ராசி
குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு இந்த காலம் மிகவும் மோசமாக இருக்கக்கூடும். சிறிய வேலைகள் செய்வதற்கு கூட அதிக உழைப்பு தேவைப்படும். வியாபாரத்தில் பெரிய பலன்கள் இருக்காது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இது சிக்கலான காலமாக அமையும். வாழ்க்கைத் துணையோடு சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களுடன் பேசினால் வாக்குவாதம் ஏற்படக்கூடும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
