Today Sukra Peyarchi: கும்பத்தில் நுழைந்தார் சுக்கிரன்.. சனியோடு சேர்ந்து கொட்டும் பணமழை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Sukra Peyarchi: கும்பத்தில் நுழைந்தார் சுக்கிரன்.. சனியோடு சேர்ந்து கொட்டும் பணமழை

Today Sukra Peyarchi: கும்பத்தில் நுழைந்தார் சுக்கிரன்.. சனியோடு சேர்ந்து கொட்டும் பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 07, 2024 10:45 AM IST

சுக்கிர பகவானின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

மார்ச் 7ஆம் தேதி அதாவது இன்று காலை சுக்கிர பகவான் கும்ப ராசிகள் நுழைந்தார். வரும் மார்ச் 30ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதன் பின்னர் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார்.

தற்போது கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிர பகவானும் இணைந்துள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவித்த போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகின்றார். உங்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இது அமைந்துள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் உயர்வான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். முன்னேற்றத்திற்கு எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் சுக்கிரன் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். உங்களுடைய ராசியில் நான்காவது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் சனி பகவான் ஏற்கனவே பயணம் செய்து வருகின்றார். தற்போது சுக்கிர பகவான் இணைந்துள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைகின்றது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner