Lord Mercury: வக்ரமாக வருகிறார் புதன்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. பண மழையில் நனையும் ராசிகள்
Lord Mercury: புதன் பகவான் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி என்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இவருடைய பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக் கூடியவர். புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கல்வியை அறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் புதன் பகவான் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி என்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இவருடைய பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசி
புதன் பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல யோகங்களை தரப்போகின்றது. ஆக்கபூர்வமான வேலைகளுக்கு ஏற்ற ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அற்புதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள்.
தனுசு ராசி
புதன் பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மேலும் வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்ப ராசி
புதன் பகவானின் வக்ர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை தரப் போகின்றது பண வரவில் எந்த குறையும் இருக்காது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.