Tamil Calendar 2025: ஜன.17 இன்றைய விஷேசங்கள் என்னென்ன?.. நல்ல நேரம், ராகு காலம் எப்போது?.. தமிழ் காலண்டர் தகவல்கள்!
Tamil Calendar 17.01.2025: 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய விஷேசங்கள், பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் உங்களுக்கு வழங்குகிறோம்.

இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், இன்றைய நாள் அம்மனுக்கு உரிய நாளாகவும் கருதப்படுகிறது. எனவே, இந்த நாளில் எந்த ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும் என்பது ஐதீகம். அந்தவகையில், சில விஷயங்களை செய்து உங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்ளுங்கள். சில விஷயங்களை இடைவிடாது செய்து வந்தால் உங்களின் பணக் கஷ்டம் தீரும் என்று ஜோதிடத்திலும் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இந்த சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு இப்படி பூஜை செய்து வந்தால் அள்ள அள்ள குறையாத செல்வங்களும், பணமும் பெருகுவதாக ஐதீகம் உண்டு.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : தை 04
தேதி: 17.01.2025
கிழமை - வெள்ளிக்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:34 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம்
காலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை நல்ல நேரம்
ராகுகாலம்
காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை ராகுகாலம்
கௌரி நல்ல நேரம்
பகல் 12:30 மணி முதல் 01:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
இரவு 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
௭மகண்டம்
காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை எமகண்டம்
மாலை 3:00 5:30 மணி வரை எமகண்டம்
குளிகை
காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 6:00 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
உத்திராடம், திருவோணம்
சந்திராஷ்டம ராசி
இன்றைய நாள் முழுவதும் மகரம் ராசிக்கு சந்திராஷ்டமம்.
சூலம்
இன்று மேற்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக வெல்லம் பயன்படுத்தலாம்
இன்றைய விசேஷங்கள்
திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு, விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் ஆலயத்தில் அம்பாளுக்கு புஷ்ப பாவாடை தரிசனம் நடைபெறும்.
இன்றைய வழிபாடு
ஸ்ரீ விநாயகப்பெருமானை வழிபட கவலைகள் குறையும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்