கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு பகவான்.. மே 14 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு பகவான்.. மே 14 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்

கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு பகவான்.. மே 14 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்

Aarthi Balaji HT Tamil
Published May 08, 2025 02:00 PM IST

குரு பகவான் மே 14 ஆம் தேதி மிதுன ராசியில் நுழைய போகிறார். குருவின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும்.

கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு பகவான்.. மே 14 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்
கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு பகவான்.. மே 14 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்

இது போன்ற போட்டோக்கள்

ஜோதிடத்தில் குரு பகவானுக்கு என்று ஒரு சிறப்பு இடம் உண்டு. குரு பகவான், அறிவு, ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, மதப் பணிகள், புனித இடங்கள், செல்வம், தானம், நல்லொழுக்கம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்குக் காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது.

குரு பகவான் மே 14 ஆம் தேதி மிதுன ராசியில் நுழைய போகிறார். குருவின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். குரு மிதுன ராசியில் பிரவேசிப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் என்பதை பார்க்கலாம்.

மிதுனம்

குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில், வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். எனவே, வாய்ப்புகளை தவறவிடாமல் பயணப்படுத்தி கொள்ளுங்கள். வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையை நோக்கி முன்னேறிச் செல்லுவீர்கள். வியாபாரிகள் தங்கள் விருப்பப்படி லாபம் பெறுவார்கள். இருப்பினும், இந்த நேரத்தில் பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். எனவே உங்களுக்குத் தேவைப்படும் போது எல்லாம் ஓய்வு எடுக்கத் தயங்க வேண்டாம்.

சிம்மம்

குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வசதிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உறவுகள் மேம்படும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும், உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வியாபாரிகள் லாபம் பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பகவாவின் பெயர்ச்சி மங்களகரமானதாக இருக்கும். உங்கள் பணி நடை மேம்படும். மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது நல்ல நேரம். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். பண தேவை அதிகரிக்கும், அதற்கு ஏற்றார் போல் நிதி உதவி தேவையான இடத்தில் இருந்து கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.