'தங்கம், நிலம், பணம் மென்மேலும் பெருக இந்த ஒரு தீபத்தை ஏற்றுங்கள் - கடன் நீங்கும்.. மகாலட்சுமி அருள் உங்களுக்குத்தான்!
வெள்ளிக்கிழமையும் நாம் இந்த பன்னீர் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து என்றென்றைக்கும் நம்முடனே இருப்பாள். இந்த தீபத்தை முழு மனதோடு மகாலட்சுமி தாயாருக்கு ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பது நம்பிக்கை.

நீங்க எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் தொடர்ந்து பிரச்சினைகள் உங்களை துரத்துகிறது. ஒரு கடனை கட்டி முடிப்பதற்குள் அடுத்த கடன் வாங்கும் சூழலால் மிகவும் கஷ்டப்படுகிறீர்களா.. அப்படி என்றால் நீங்கள் இந்த பன்னீர் நெய் தீபத்தை ஏற்றி மகாலட்சுமியை வழிபடுங்கள். உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். இதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
இந்த சிறப்பு வாய்ந்த தீபத்தை 16 வெள்ளிக்கிழமை ஏற்றலாம். 16 வாரங்கள் முடிந்த பின் இரண்டு மூன்று வாரங்கள் விட்டுவிட்டு மீண்டும் 16 வாரங்கள் ஏற்றலாம். இப்படி தொடர்ச்சியாக இந்த தீபத்தை நாம் ஏற்றிக் கொண்டே வரலாம். இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றுவது என்பது விஷேசமான ஒன்றாக கருதப்படுகிறது. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சுக்கிர ஹோரையில் ஏற்றலாம். இல்லையென்றால் மாலை நேரத்தில் இந்த தீபத்தை இந்த தீபத்தை ஏற்றி மனமுருகி லட்சுமி தேவியை வணங்கினால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.
நாம் தீபம் ஏற்றுதற்கு காட்டன் துணியையும், ஒரு பாட்டில் பன்னீரையும் வாங்கி வர வேண்டும். வீட்டிற்கு வந்ததும் ஒரு பாத்திரத்தில் இந்த பன்னீரை ஊற்றி அந்த பன்னீருக்குள் நாம் வாங்கி வந்த துணியை போட்டு நன்றாக நனைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் முதல் ஒரு மணி நேரம் வரை அந்த துணி பன்னீரில் நன்றாக ஊற விட வேண்டும். பின்னர் அந்த துணியை எடுத்து பிழியாமல் அப்படியே நிழலில் உலர்த்த வேண்டும். இந்த துணி நன்றாக காய்ந்ததும் இதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.