Five Important Worships : ஆடி மாதம் கட்டாயம் வழிபட வேண்டிய ஐந்து முக்கியமான வழிபாடுகள்!
ஆடி மாத சிறப்புகளும் ஆடி மாதம் கட்டாயம் நம் செய்ய வேண்டிய ஐந்து வழிபாடுகளையும் பற்றியும் இதில் தெரிந்து கொள்வோம்.

குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்கு சென்று வருவது நல்லது. எத்தனையோ தெய்வங்கள் இருக்கிறது. ஆனால், அதில் குலதெய்வம் என்பது மிக மிக முக்கியம். அதுவும் ஆடிமாதம் குலதெய்வ வழிபாடு நல்ல பலன்களை தரும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அப்படி கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையில் மஞ்சள் உப்பு வாங்கி வந்து வைத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்யுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை வழிபட்டு கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வருடம் முழுவதும் வரும் அமாவாசைகளில் விரதம் இருக்க முடியாவிட்டாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நம் வாழ்வில் முன்னோர்களின் ஆசிர்வாசம் கிடைக்கும். இது பெண்கள் செய்யக்கூடாது.
ஆண்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்கள் நற்கதி அடைவதற்காக மட்டுமல்ல. யார் ஒருவர் அமாவாசை அமாவாசை தோறும் விரதம் இருந்து முன்னோர் வழிபாடு செய்து, தர்ப்பணம் கொடுக்கிறார்களோ, அதன் பலன் அவர்களின் பிள்ளைகளை போய் சேரும். அவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக அமைய அது வழி செய்யும்.