Periya Puranam: பெரிய புராணம் தெரியும்! சி.கே.சுப்பிரமணிய முதலியாரை தெரியுமா? இவர் மட்டும் இல்லை என்றால்…!
”Periya Puranam: இவரது உரை பெரிய புராணத்தின் மையக் கருத்துகளையும், நுணுக்கங்களையும் தெளிவாக விளக்குகிறது”

திருத்தொடர்புராணம் எனப்படும் பெரியபுராணத்திற்கு உரை எழுதியதன் மூலம் சிவக்கவிமணி என்று சி.கே.சுப்பிரமணிய முதலியார் போற்றப்படுகிறார். 1878ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பிறந்தார். இவரது முன்னோர்கள் தொண்டை மண்டலத்தில் இருந்து கோவைக்கு குடிபெயர்ந்தவர்கள். இவரது தந்தை உ. கந்தசாமி முதலியார் ஒரு வழக்கறிஞரும், தமிழறிஞரும் ஆவார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Apr 29, 2025 10:44 AMபரசுராம் ஜெயந்தியில் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! நல்ல நேரமும் லாபமும் வரும் நேரம் இது!
Apr 29, 2025 05:00 AM'நல்ல செய்தி தேடி வரும்.. உழைப்பு முக்கியம்' இன்று ஏப்.29, 2025 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
சுப்பிரமணிய முதலியார் தனது தொடக்கக் கல்வியை தந்தையிடம் பயின்றார். பின்னர் திருச்சிற்றம்பலம் பிள்ளை என்பவரிடம் சைவ சமயம் சார்ந்த சைவக்கல்வியை கற்றுத்தேர்ந்தார்.
1918ஆம் ஆண்டில் சதாசிவ செட்டியார் பெரியபுராண விரிவுரையை ஆற்றிய போடு அவருக்கு பெரிய புராணம் குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தியது.
கல்லூரி படிப்பை முடித்த பிறகு, சுப்பிரமணிய முதலியார் கோயம்புத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். வழக்கறிஞராகப் பணிபுரிந்தாலும், இவர் தமிழ் இலக்கியம் மற்றும் சைவ சமய ஆய்வில் ஈடுபட்டார். மேலும் கோவை நகரசபை உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்ட அவர், இந்திய விடுதலை போராட்டத்திலும் கலந்து கொண்டார். 1956ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘பித்தன் ஒருவனின் சுயசரிதை’ என்ற நூலானது 2006ஆம் ஆண்டு வெளியானது.
1934ஆம் ஆண்டு முதல் 1953ஆம் ஆண்டு வரை 19 ஆண்டுகாலம் பெரியபுராண உரையை சுப்பிரமணிய முதலியார் எழுதினார். இவரது உரை பெரிய புராணத்தின் மையக் கருத்துகளையும், நுணுக்கங்களையும் தெளிவாக விளக்குகிறது.
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்திற்கு ஆறுமுகநாவலர் எழுதிய உரை முக்கியமானதாக உள்ளது. இருப்பினும், அவரது உரையானது காரைக்கால் அம்மையார் பாடலுடன் நின்றுவிட்டது.
பல தமிழறிஞர்கள் பெரியபுராணத்திற்கு உரை எழுதி இருந்தாலும் முழுமையான விரிவான பெரிய புராண உரையை சுப்ரமணிய முதலியாரே எழுதினார். தாம் எழுதிய உரைக்கு ஆதாரமாக நூலாக வா. மகாதேவ முதலியார் எழுதிய பெரியபுராண ஆராய்ச்சி நூலை எடுத்துக் கொண்டார். சுப்பிரமணிய முதலியார் பெரிய புராணத்திற்கு உரை எழுதியதோடு மட்டுமல்லாமல், பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார்.
சுப்பிரமணிய முதலியார் தமிழ் இலக்கியம் மற்றும் சைவ சமயத்திற்கு செய்த பங்களிப்புகள் அளப்பரியவை. இவரது பணிகள் தமிழ் மக்களால் இன்றும் போற்றப்படுகின்றன. 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி அன்று தனது 83ஆம் வயதில் திருப்போரூரில் சுப்பிரமணிய முதலியார் காலமானார்.

டாபிக்ஸ்