உங்க குலதெய்வத்தை மறக்காதீங்க.. வீட்டில் மகிழ்ச்சியை அள்ளித் தரும் பௌர்ணமி குலதெய்வ வழிபாடு.. தடை நீக்கும் பரிகாரம் இதோ!
பௌர்ணமி வானில் பிரகாசமாக தோன்றும் அற்புதமான நாள். முழு நிலவாய் இருக்கும் இந்நாளில் நல்ல அதிர்வலைகள் உலகில் இருக்கும் சக்தி மிகுந்த நாளாகவும் காணப்படுகிறது. இந்த நாளில் நம் குலதெய்வமாக இருக்கும் பெண் தெய்வத்தை தேவியாக வழிபடுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்தியில் இருந்தும் விடுபடலாம்.

ஒவ்வொருவரின் குலமும் செழித்து வாழ கண்டிப்பாக நாம் கட்டாயம் குலதெய்வ வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். பௌர்ணமி வானில் பிரகாசமாக தோன்றும் அற்புதமான நாள். முழு நிலவாய் இருக்கும் இந்நாளில் நல்ல அதிர்வலைகள் உலகில் இருக்கும் சக்தி மிகுந்த நாளாகவும் காணப்படுகிறது. இந்த நாளில் நம் குலதெய்வமாக இருக்கும் பெண் தெய்வத்தை தேவியாக வழிபடுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்தியில் இருந்தும் விடுபடலாம். உங்கள் வீட்டில் நன்மைகள் வந்து அடையும். அம்மன் கோயில்களுக்கு சென்று பௌர்ணமி நாளில் வழிபடுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பட்ட கஷ்டங்கள் இருந்து நீங்க விடுபடலாம். அதுபோல வீட்டில் மாலை வேளையில் விளக்கேற்றி சந்திரனை தரிசித்து பிறகு லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி வழிபடுவதன் மூலம் வீட்டிலே நீங்கள் இருக்கக்கூடிய பண வரவு உங்களுக்கு அதிகரிக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
பௌர்ணமியில் குல தெய்வ வழிபாடு
நம் குலத்தை காக்கும் தெய்வமே குல தெய்வம். பெண்களுக்கு குல தெய்வம் திருமணத்திற்கு பின் மாறுபடும். ஆண்களுக்கு எப்போதும் ஒரே குல தெய்வம்தான். நாம் எத்தனை இஷ்ட தெய்வங்களை வணங்கினாலும், குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம். குல தெய்வ வழிபாட்டில் பௌர்ணமிக்கு சிறப்பு பங்கு உள்ளது.
பௌர்ணமி நாளிலே குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமான ஒன்று. குலதெய்வ கோயில் அருகில் இருந்தால் பௌர்ணமி பௌர்ணமிக்கு சென்று நீங்கள் வழிபடுவது நல்லது. இது நமக்கு நன்மைகளை வாரி வழங்கும். தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். குலதெய்வம் பூர்வீக கிராமத்தில் இருக்கிறது. அதனால் நீங்கள் மாத தோறும் பௌர்ணமி நாளில் அங்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் இருந்தபடியே வீட்டிலே விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம் உங்களுடைய குலதெய்வ படத்திற்கு மாலையிட்டு அல்லது பூக்களால் அலங்கரித்து குலதெய்வத்திற்கு மனதார நினைத்து பிரார்த்தனை செய்யலாம். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் போன்றவற்றை நீங்கள் குலதெய்வத்திற்கு நெய்வேதியமாக செய்து வேண்டிக் கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் கொடுத்து வாருங்கள். மாதாமாதம் பௌர்ணமி நாளில் இந்த வழிபாடு நீங்கள் செய்வதன் மூலம் உங்களுக்கு குலதெய்வ அருள் கிடைக்கும்.