Mercury: உங்கள் குழந்தைகள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்க ஆசையா.. புதனை மட்டும் மறந்துடாதீங்க மக்களே!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury: உங்கள் குழந்தைகள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்க ஆசையா.. புதனை மட்டும் மறந்துடாதீங்க மக்களே!

Mercury: உங்கள் குழந்தைகள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்க ஆசையா.. புதனை மட்டும் மறந்துடாதீங்க மக்களே!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Oct 03, 2023 02:45 PM IST

அதனால் தான் கொடி இருவன் பாவத்தை புதன் ஒருவன் தீர்ப்பான் என்று கூறுவர்.

புதன் பகவான்
புதன் பகவான்

இது போன்ற போட்டோக்கள்

புதன் என்றாலே ஒரு ஆளுமை மிக்க கிரகம்.  அதனால் தான் கொடி இருவன் பாவத்தை புதன் ஒருவன் தீர்ப்பான் என்று கூறுவர். இங்கு ராகு கேது இருவரும் கொடியவர்கள் என்று கருதப்படுகின்றனர். பொதுவாக ஜோதிடத்தில் ராகு கேது இருவரும் தீமை செய்பவர்களாக பார்க்கப்படுகின்றனர். இதனால்தான் கொடி இருவர் பாவத்தை புதன் ஒருவர் தீர்ப்பான் என்று கூறப்படுகிறது.

எண் கணிதத்தில் புதன் கிரகத்தை ஏணிப்படி என்பர். 5ம் எண்ணில் பெயர் வைப்பவர்கள் வாழ்வில் அடுத்தடுத்து உயர்ந்து வெற்றியை எட்ட காரணம் புதன்தான்.

ஜாதகத்தில் புதன் ஸ்திரமாக இல்லை என்றால் பெயர் மாற்றி பலன் இல்லை.

புதன் ஆளுமைக்கு உட்பட்டவர்களுக்கு பச்சை நிறம் மிகவும் பிடிக்கும்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொன்னதற்கு காரணம் பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்று அர்த்தம் இல்லை.

பொன் என்றால் பொன்னவன் குருபகவான். குரு மிக பெரிய கிரகம். புதன் இருப்பதிலேயே மிகவும் சிறியது. அதனால் தான் பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழி வந்தது.

புதன் என்றாலே இரட்டை தன்மை கொண்டது புதன் சமாதான பிரியர். அதனால்தான் ஆயில்யம், ரேவதி, கேட்டயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சமாதானத்தை விரும்புவர்.

புதனுக்கு குரு கிடையாது. அதனால் புதனுக்கு அவரே குரு. அதனால் அவர்கள் நாம்தான் எல்லாமே என்ற எண்ணம் இருக்கும்.

அனைத்து விஷ்ணு அம்சங்களும் புதன்தான்.

தசாவதாரத்தை குறிப்பது புதன். புதன் பலமாக இருந்தால் தசாவதார பூஜை நல்லது.

புதன் பலமாக இருந்தால் ஸ்ரீசக்ரம் இயந்திரம், சங்கு, ஆகியவற்றை வைத்து பூஜை செய்யலாம்.

பொதுவாக கல்வி நகரங்கள் கூட புதனின் ஆளுமைக்கு உட்பட்டது தான்.

மனப்பிறழ்வு ஏற்படாமல் இருக்க புதன் பலமாக இருக்க வேண்டும். காதலை தூண்டவும் புதன் காரணமாக இருக்கும்.

ஆயில்யத்தில் பிறந்தவர்கள் பாம்பு மேல் படுத்திருக்கும் புதனை வழிபடலாம். கேட்டயத்தில் பிறந்தவர்கள் இந்திரனை வழிபடலாம். ரேவதியில் பிறந்தவர்கள் நின்ற கோலத்தில் அல்லது படுத்த கோலத்தில் இருக்கும் பெருமாள் வழிபாடு நல்லது.

ஜாதகத்தில் புதன் பலமாக இல்லை என்றால் விஷ்ணு வழிபாடு, பெருமாள் வழிபாடு, தசாவதார வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

Whats_app_banner

டாபிக்ஸ்