குலதெய்வம் கோபம் தணிய வேண்டுமா.. இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்..குல தெய்வ பூஜையின் முக்கியத்துவம் இதோ!
குலத்தை காப்பதும், முன்னேற்றத்துக்கு கொண்டு வருவதும் குலதெய்வம் என்ற நம்பிக்கை பொதுவாக எல்லோருக்கும் உள்ளது. நமது இஷ்ட தெய்வம் என்ற பெயரில் நம் விருப்பத்திற்கு ஏற்ப தெய்வங்களை மாற்றி மாற்றி வழிபாடு செய்யலாம். அது நம் தனிப்பட்ட பிரியம். ஆனால் குல தெய்வ வழிபாடு என்பது அப்படி இல்லை.

ஒவ்வொரு குடும்பங்களுடைய அடையாளம் அவர்களுடைய குலதெய்வம். அதாவது அந்த குலத்தை காப்பதும், முன்னேற்றத்துக்கு கொண்டு வருவதும் குலதெய்வம் என்ற நம்பிக்கை பொதுவாக எல்லோருக்கும் உள்ளது. நமது இஷ்ட தெய்வம் என்ற பெயரில் நம் விருப்பத்திற்கு ஏற்ப தெய்வங்களை மாற்றி மாற்றி வழிபாடு செய்யலாம். அது நம் தனிப்பட்ட பிரியம். ஆனால் குல தெய்வ வழிபாடு என்பது அப்படி இல்லை. இங்கு குல தெய்வ வழிபாடு என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
குல தெய்வ வழிபாடு அவசியமா?
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு குலம் விருத்தி அடைய வேண்டும் என்றால் குல தெய்வ வழிபாடு முக்கியம் என்பது ஐதீகம். நம் முன்னோர்கள் காலத்தில் மறைந்த முன்னோர்களை குல தெய்வமாக ஏற்று வழிபட ஆரம்பித்தனர். நம் முன்னோர்கள் எந்த தெய்வத்தை குல தெய்வமாக வழிபடுவார்களோ அதுவே நமக்கும் குல தெய்வம். நாம் இஷ்ட தெய்வத்தை மாற்றி கொள்ளலாம். ஆனால் குல தெய்வத்தை மாற்றவே முடியாது.
குல தெய்வ பூஜையின் முக்கியத்துவம்
நாம் எந்த ஒரு வழிபாட்டை செய்யும் போதும் குல தெய்வத்தை முதலில் வணங்கி விட்டு தான் வீட்டில் பூஜைகளை செய்ய வேண்டும். நம் வீட்டில் திருமணம், கிரக பிரவேஷம் என எந்த ஒரு நல்ல காரியம் நடந்தாலும் முதலில் குல தெய்வத்தை மனதில் வணங்கி ஆரம்பிக்க வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் குல தெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்த பின்னர் செயல்களை தொடங்கலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டில் குல தெய்வத்தை வணங்கி மஞ்சள் துணியில் பணத்தை முடிந்து வைத்து வழிபாடு செய்த பின் நல்ல காரியங்களை தொடங்கலாம்.