கடவுளின் பிரசாதத்தை ஏன் இடது கையால் வாங்க கூடாது? - முழு காரணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கடவுளின் பிரசாதத்தை ஏன் இடது கையால் வாங்க கூடாது? - முழு காரணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கடவுளின் பிரசாதத்தை ஏன் இடது கையால் வாங்க கூடாது? - முழு காரணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Published May 09, 2025 03:30 PM IST

பிரசாதத்தை ஏன் இடது கையால் சாப்பிடக்கூடாது, ஏன் வலது கையால் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கடவுளின் பிரசாதத்தை ஏன் இடது கையால் எடுக்கக் கூடாது? - முழு காரணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கடவுளின் பிரசாதத்தை ஏன் இடது கையால் எடுக்கக் கூடாது? - முழு காரணம் பற்றி உங்களுக்கு தெரியுமா? (pinterest)

இது போன்ற போட்டோக்கள்

பொதுவாக யாரும் இடது கையால் பிரசாதத்தை வாங்குவதில்லை. ஆனால் பிரசாதத்தை ஏன் இடது கையால் சாப்பிடக்கூடாது, ஏன் வலது கையால் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். இடது கையை தூய்மையற்றதாகக் கருத வேண்டுமா அல்லது மூடநம்பிக்கை என்று கருத வேண்டுமா என்று பலர் கேட்கிறார்கள். இதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

வலது கையின் முக்கியத்துவம்

அறிஞர்களின் கூற்று படி, வலது கை மங்களகரமான சக்தியான சூரியனின் சின்னமாகும். இடது கையின் மறைக்கப்பட்ட சக்தி சந்திரனுடன் தொடர்புடையது. நாம் கடவுளுக்கு ஆரத்தி சமர்ப்பித்தால், காணிக்கை செலுத்துதல், யாருக்காவது தானம் கொடுப்பது என முற்றிலும் எல்லா விஷயங்களையும் நாம் வலது கையைப் பயன்படுத்துகிறோம். இப்படி செய்வதன் மூலம் இறைவனின் அருளைப் பெற்று, மகிழ்ச்சியாக இருக்கவும், தடைப்பட்ட பணிகளை கூட செய்து முடிக்கவும் முடியும் என்பது ஐதீகம்.

இடது கை துரதிர்ஷ்டத்தை கொண்டு வருமா?

ஜோதிடர்களின் கூற்று படி, இடது கை சில நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது தூய்மையற்றதாக கருதப்படுகிறது. அதனால் தான் இடது கையால் எந்த ஒரு தர்ம காரியத்தையும் செய்வது அமங்கலம் என்று கூறப்படுகிறது.

பிரசாதம் பெறுவது எப்படி?

ஜோதிடர்களின் கூற்று படி , பிரசாதத்தை வலது கையால் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு முன் கைகளை கழுவ வேண்டும். பிரசாதத்தை சுத்தமான கைகளுடன் ஏற்க வேண்டும், பிரசாதத்தை வலது கையில் இருந்து இடது கைக்கு மாற்ற கூடாது. பிறகு கண்களை மூடி கொண்டு பிரசாதத்தை மனதார வேண்டி கொண்ட பிறகு சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், மன நிறைவும், மன அமைதியும் இருக்கும். கடவுளின் முழு ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்த ஒரு தகவல்/ பொருள்/ அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டு உள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்து கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.