வீட்டில் இந்த இடத்தில் விநாயகர் சிலையை வைக்காதீங்க.. திருமண வாழ்வில் பிரச்சனை தேடி வரும்.. விநாயகர் வைக்க சரியான திசை!
வாஸ்து படி கணபதி சிலையை குளியலறையின் கதவுக்கு அருகில் வைக்க வேண்டாம். மேலும் படுக்கையறையில் விநாயகர் சிலையை வைத்தால் திருமண வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படும். அதனால் இந்த இடத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது.

முழு முதல் கடவுள் விநாயகர்.ஜோதிடத்திலும் விநாயகர் முக்கிய தெய்வமாக கருதப்படுகிறார். நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் விலகி குடும்பத்தில் அதிர்ஷடம் பெருகவும், கண்திருஷ்டி நீங்கவும், விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறவும் மக்கள் பெரும்பாலும் விநாயகர் சிலையை தங்கள் வீட்டின் பிரதான வாசலில் வைப்பார்கள். நாள்தோறும் கணபதியை தினமும் வழிபடுகிறார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 26, 2025 06:03 PMகுருபெயர்ச்சி பலன்: பண அதிர்ஷ்டம் இந்த ராசிகள் கதவை தட்டப்போகுது.. 2025-இல் மே குரு பெயர்ச்சி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
Mar 26, 2025 02:26 PMகீர்த்தி யோகம்: சனிப்பெயர்ச்சி 2025.. தலைகீழாக மாறப்போகும் ராசிகள் யார்?.. சனி குறித்து விட்டார்..!
Mar 26, 2025 11:17 AMரிஷபம், கும்பம், விருச்சிக ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. சனி உதயத்தால் நல்ல நேரம் ஆரம்பம்.. பதவி உயர்வு கிடைக்கும்!
Mar 26, 2025 06:30 AMKetu Transit 2025: அந்த ராசிகளே தான்.. கேது பெயர்ச்சி.. அசுப கிரகம் தரும் யோக பலன்களை பெறும் ராசிகள்!
Mar 26, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பணம் தேடி வரும் யோகம் உங்களுக்கா.. கவனமா இருங்க காரியம் முக்கியம்.. இன்று ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Mar 25, 2025 04:04 PMவக்ர செவ்வாய்: நேராக வருகின்ற செவ்வாய்.. இனி வாழ்க்கை நேராக மாறும் ராசிகள்.. உங்க ராசி என்ன ராசி?
வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக பூஜை அறையுடன் வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்படுகிறது. இப்படி வைத்திருப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. ஏனெனில் நேர்மறை ஆற்றல் மற்றும் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்திற்கு வீட்டின் பிரதான கதவு மிகவும் முக்கியமானது. விநாயகர் சிலையை வைத்தால் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வராது என்பது நம்பிக்கை. நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்து நிம்மதி குடியேறும்.
நாம் செய்யும் வேலையில் உள்ள தடைகள் நீங்கவும், துன்பங்கள் நீங்கவும் அனைவரும் விநாயகப் பெருமானை வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், விநாயகர் மகிழ்ச்சியடைந்து, தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பார் என்பது நம்பிக்கை. ஆனால் வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் விநாயகர் சிலையை நிறுவும் போது வாஸ்து தொடர்பான சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சிலையை நிறுவுவதற்கு வாஸ்து விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
விநாயர் வைக்கும் திசை முக்கியம்
வாஸ்து படி, விநாயகர் சிலையை பிரதான நுழைவாயிலில் பிரதிஷ்டை செய்யும் போது திசையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பிரதான கதவு வடக்கு அல்லது தெற்கு நோக்கி இருந்தால் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வது நல்லது. ஆனால் பிரதான கதவு கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருந்தால் வீட்டில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது.
சிலை வைப்பது எப்படி
விநாயகர் சிலையை வைக்கும் போதுவிநாயகரின் முகம் தெளிவாக இருக்க வேண்டும். வீட்டில் எப்போதும் அமர்ந்த நிலையில் சிலை அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் விநாயகர் சிலையை வைப்பது நேர்மறை ஆற்றலைப் பரப்பும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும் என்பது நம்பிக்கை.
விநாயகரின் நிறம்
வாஸ்து படி, காவி நிற விநாயகர் சிலையை பிரதான வாசலில் வைப்பது மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு மங்களகரமானது. இவை தவிர, கையில் லட்டு, மோதகம் மற்றும் விநாயகருக்கு பிடித்த வாகனமான எலி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முன்னேற்றத்திற்கு வெள்ளை நிற விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வது நல்லது.
உடற்பகுதியின் திசை முக்கியமானது
பிரதான வாயிலில் உள்ள கணபதி சிலையில், அவரது தலை இடதுபுறமாக இருக்க வேண்டும். வீட்டில் வைத்தால் தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் சிலையை வலது பக்கம் வைக்க வேண்டும். குழந்தைப் பேறு விரும்புபவர்களும், புதுமணத் தம்பதிகளும் விநாயகப் பெருமானின் சிலையை வலப்புறம் தலை வைத்து வீட்டில் வைப்பது மிகவும் நல்லது.
இந்த சிலைகள் வேண்டும்
நடனம் ஆடும் விநாயகர் சிலையை தவறுதலாக கூட வீட்டில் வைக்கக்கூடாது. அப்படியான சிலையை யாருக்கும் பரிசாக வழங்கக்கூடாது. அத்தகைய சிலையை வீட்டில் வைத்தால் சண்டை, ச்சரவுகள் ஏற்படும்.
இந்த இடத்தில் வேண்டாம்
வாஸ்து படி கணபதி சிலையை குளியலறையின் கதவுக்கு அருகில் வைக்க வேண்டாம். மேலும் படுக்கையறையில் விநாயகர் சிலையை வைத்தால் திருமண வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படும். அதனால் இந்த இடத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்