Today Pooja Time: வியாழக்கிழமை யாருக்கு உகந்த நாள்?.. வழிபாட்டின் சிறப்புகள் என்ன?.. தமிழ் காலண்டர் தகவல்கள்!
Today Pooja Time: 2025 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் நாளான இன்று (வியாழக்கிழமை) பூஜைக்கு உரிய நல்ல நேரம், முக்கிய விசேஷங்கள், ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் உங்களுக்கு வழங்குகிறோம்.
பொதுவாக குரு பகவானுக்கு உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. வியாழக்கிழமைகளில் குரு பகவானை மனதார நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். குரு பகவானின் அருளை பெறுவதற்கு இந்நாளில் விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். குரு பகவானை நினைத்து விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலையிலேய் எழுந்து சுத்தமான நீரில் குளித்துவிட்டு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உணவு, தண்ணீர் என எதையும் உட்கொள்ளாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், வழிபாட்டின் சிறப்புகள், நல்ல நேரம், எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : மார்கழி 25
தேதி: 09.01.2025
கிழமை - வியாழக்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:33 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:30 மணி முதல் 01:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
பிற்பகல் 01:00 மணி முதல் 03:00 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை எமகண்டம்
குளிகை
பிற்பகல்: 09:00 மணி முதல் 10:30 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் ஹம்செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 5:55 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்தம், சித்திரை
சந்திராஷ்டம ராசி
இரவு 08.35 வரை கன்னி பின்பு துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம்
சூலம்
இன்று தெற்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக தைலம் பயன்படுத்தலாம்
இன்றைய விசேஷங்கள்
- திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில் தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெறும்.
- திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெறும்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் மாலை தந்த பரங்கி நாற்காலியில் பவனி வரும் காட்சி நடைபெறும்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
இன்றைய வழிபாடு
- ஸ்ரீ முருகப்பெருமானை வழிபட காரியத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்