வருவாய் தரும் செவ்வாய்கிழமை விரதத்தின் சிறப்புகள் என்ன?.. இன்று நல்ல நேரம் எப்போது?.. தமிழ் நாள்காட்டியின் தகவல்கள்!
2025 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் நாளான இன்றைய நாளின் விரத சிறப்புகள் என்னென்ன, வழிபாடு செய்ய நல்ல நேரம் மற்றும் விரத முறைகள் குறித்த பொதுவான தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
வேத ஜோதிடத்தில், கிரகங்களின் தளபதியான செவ்வாய் மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுகிறார். இவரே ஆற்றல், வீரம், தைரியம், சக்தி ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. புனிதமான இந்நாள் தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகனுக்கும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த சிறப்புமிக்க நாளில் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம்.
செவ்வாய்கிழமை தோறும் அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். பின்னர் வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை கடைபிடிக்க வேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.
மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த விரத்தை 9 செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடித்தால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். வீட்டில் உள்ள பண கஷ்டமும் சரியாகிவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.
அந்தவகையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் நாளான இன்று பூஜைக்கு உரிய நல்ல நேரம், முக்கிய விசேஷங்கள், எமகண்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த தகவல்கள் இதோ..
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
தமிழ் மாதம் : மார்கழி 23
தேதி: 07.01.2025
கிழமை - செவ்வாய்கிழமை
சூரிய உதயம்
இன்றைய சூரிய உதயமானது காலை 6:32 மணிக்கு நடைபெறுகிறது
நல்ல நேரம்
காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை நல்ல நேரம்
கௌரி நல்ல நேரம்
மாலை 01:30 மணி முதல் 02:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை கெளரி நல்ல நேரம்
ராகு காலம்
மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை ராகு காலம்
௭மகண்டம்
காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை எமகண்டம்
குளிகை
பிற்பகல்: 12:00 மணி முதல் 01:30 மணி வரை குளிகை
(குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் ஹம்செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)
சூரிய அஸ்தமனம்
மாலை 5:34 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறும்
சந்திராஷ்டம நட்சத்திரம்
உத்திரம், பூரம்
சந்திராஷ்டம ராசி
இன்று மாலை: 05.38 மணி வரை சிம்மம் ராசிக்கு சந்திராஷ்டம் பின்பு கன்னி ராசி.
சூலம்
இன்று வடக்கே சூலம்
பரிகாரம்
இன்றைய பரிகாரமாக பால் பயன்படுத்தலாம்.
இன்றைய விசேஷங்கள்
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு அலங்கார உற்சவம் நடைபெறும்.
- தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் திருக்கோயிலில் சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.
- தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் ஆலயத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.
இன்றைய வழிபாடு
- ஸ்ரீ ராமரை வழிபட தொழில் நிமித்தமான சிக்கல்கள் குறையும் என்பது நம்பிக்கை.
- செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம்.
பொறுப்பு துறப்பு:
ஜோதிடர்கள் மற்றும் தமிழ் நாள்காட்டியின் தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தியாகும். இதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்