’5 ரூபாய் நாணயத்தை கொண்டு வீட்டில் பணம் கொட்ட வைக்க முடியுமா?’ செல்வம் சேர்க்கும் குபேர வழிபாடு!
பெருத்த வயிறு, சிரித்த முகத்தோடு, பொன், பொருட்கள் அடங்கிய செல்வ வளத்தோடு குபேர பகவான் அமர்ந்து இருப்பார். செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியான வாழ்கை வாழ குபேர கடாட்சம் முக்கியமானது.

செல்வத்தின் அதிபதியான குபேரன் ஆனவர் பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர். குரு பகவானுக்கு உரிய வியாழன் கிழமை அன்று மாலை 6.30 மணியை குபேர நேரம் என்று அழைக்கப்படுகின்றது. 72ஆம் எண் ஆனது குபேரனுக்கு உரிய எண் ஆகும். குபேரனுக்கு உரிய வாகனமாக கீரி உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
பணம் தரும் குபேர வழிபாடு
வீட்டில் செல்வம் சேர, பணமழை பெற குபேர வழிபாட்டை தவறாது மேற்கொள்ள வேண்டும். குபேர வழிபாடு மட்டுமின்றி தொடர்ந்து மகாலட்சுமி வழிபாடும் செய்து வருபவர்களின் வாழ்வில் ஐஸ்வர்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது நம்பிக்கை. பொதுவாக குபேரர் ஒரு நாணய பிரியர் என்பது நமக்கு தெரிந்த விஷயம். இதனால் குபேரரை வழிபடும் போது நாம் நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுவது குபேர வழிபாடுகளில் மிக முக்கியமானது ஆகும்.
குபேர வழிபாடு செய்யும் முறைகள்
பெருத்த வயிறு, சிரித்த முகத்தோடு, பொன், பொருட்கள் அடங்கிய செல்வ வளத்தோடு குபேர பகவான் அமர்ந்து இருப்பார். செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியான வாழ்கை வாழ குபேர கடாட்சம் முக்கியமானது. வளர்பிறை விழாயன் கிழமை அன்றோ அல்லது பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களிலோ மாலை 6.30 மணி அளவில் உங்களது வீட்டில் குபேரனின் படம் அல்லது குபேர இயந்திரத்தை வடக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். 55 எண்ணிக்கையில் 5 ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளவும். தனித்தனியாக உள்ள வில்வ இலைகள் மீது சந்தனம் தடவிக் கொள்ளவும். 2 அகல் விளக்கில் சுத்தமான பசு நெய்யை கொண்டு தாமரை தண்டு திரி மூலம் விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு 5 ரூபாய் நாணயம் மற்றும் ஒரு வில்வ இலையை எடுத்துக் கொண்டு குபேரனின் படம் முன்னரோ அல்லது குபேர இயந்திரத்தின் முன்னோ ’ஓம் குபேராய நமக’ என்று அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்த நாணயங்களை கொண்டு தங்கம், வெள்ளி, வீடு, வாகனம் வாங்கும் போது வீட்டில் குபேர சம்பத்து பெருகும்.