Budhwa Mangal: நாளை வரும் புத்வா மங்கள்.. இந்நாளில் அனுமனை வழிபடுவதால் உண்டாகும் சிறப்புகள்!
Budhwa Mangal: நாளை புத்வா மங்கள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனுமனை வழிபடுவதால் எண்ணற்ற பலன்கள் உண்டாகின்றன.

Budhwa Mangal: இந்து நாட்காட்டியின்படி, மே 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜேஷ்டா மாதம் தொடங்கியது. ஜேஷ்டா மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ‘புத்வா மங்கள்’ என அழைக்கப்படுகிறது. இது ஆஞ்சநேயருக்கு ஒதுக்கப்பட்ட நாளாகும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Apr 29, 2025 10:44 AMபரசுராம் ஜெயந்தியில் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! நல்ல நேரமும் லாபமும் வரும் நேரம் இது!
புத்வா மங்களின் முதல் செவ்வாய்க்கிழமை மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மே 28ஆம் தேதி அதிகாலை 4:27 மணிக்குத் தொடங்கி, நள்ளிரவு 2:05 மணிவரை நீடிக்கும்.
இந்த காலத்தில் ‘பிரம்ம யோகம்’ உண்டாகிறது. அப்போது சந்தோஷம் சார்ந்த நிகழ்வுகள் உண்டாகும். நீங்கள் ஒரு புதிய தொழிலை செய்யத் தொடங்க நினைத்தால், ’புத்வா மங்களில்’ செய்யலாம். நன்கொடைகள் மற்றும் சுப காரியங்கள் செய்யப்படுகின்றன.
புத்வா மங்களின் வரலாறு என்ன?
மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் ஒருவரான பீமன்,தான் வலிமையானவர் என்று பெருமிதம் கொண்டார். அவரது ஆணவத்தை அடக்க, அனுமன் குரங்கு வடிவில் விஸ்வரூபமெடுத்தார். அந்த நாளே ‘புத்வா மங்கள்’ என அழைக்கப்படுகிறது.
அனுமனின் ஆசியைப் பெற விரும்பினால், ’புத்வா மங்கள்’ நாளில், அனுமனின் ஆலயம் சென்று, பிரசாதம் வழங்க வேண்டும். ஆலமர இலை கொண்டு அனுமனுக்கு அர்ச்சனை செய்வது, அந்த இலையை நதியில் மிதக்கச் செய்வது பல பிரச்னைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
இந்த பூஜையின் நாளின் போது வெண்மை அல்லது கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. யாரையும் அவமதிக்கக் கூடாது. கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
அனுமனுக்கு இஷ்டமான ராசிகள்:
அனைத்து 12 ராசிகளிலும் சில ராசியினருக்கு அனுமனின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.
மேஷம்:
மேஷ ராசியினரை அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். மேஷ ராசியினர் வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது, அனுமனை வழிபட்டால் சிக்கல்கள் பஞ்சாக பறந்துவிடும். பணப்பிரச்னை, மனச்சோர்வு, அறிவுச்சோர்வு ஆகியவை இருந்தால், மேஷ ராசியினர் அனுமனை செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் தீர்வு கிடைக்கும்.
சிம்மம்:
இந்த ராசியினருக்கு குடும்பத்தில் சிக்கல் எழுந்தால், தூய மனதுடன் அனுமனை வழிபட்டால் உடனடியாகப் பிரச்னைகள் அகலும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிகழாது.
விருச்சிகம்:
இந்த ராசியினருக்கு அனுமனின் ஆசியால், கடினமான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். அனுமன் வழிபாடு பல நல்ல பலன்களை விருச்சிக ராசியினருக்குத் தரும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு அனுமனின் ஆசியுண்டு. கும்ப ராசியினர், செவ்வாய்க்கிழமை அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தடைகள் நீங்கும். தாமதம் விலகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

டாபிக்ஸ்