Baba Vanga Predictions: 2025ம் ஆண்டு தொடக்கமே பேரழிவு.. இதைவிட மோசமான நாட்கள் வருமா?.. பாபா வங்கா கணித்தது பலிக்குமா?
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்காவின் பல கணிப்புகள் பொருந்தியுள்ளன. 2025 ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் நிலநடுக்கங்கள் குறித்தும் அவர் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பார்வையற்ற பெண் 2025 பற்றி என்ன சொன்னார் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா தனது 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால், பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் உயிரிழப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதியதாக கூறப்படுகிறது. பாபா வங்கா உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறது.
வரலாற்றில் மிகவும் பிரபலமான மர்மங்களில் ஒருவர் பாபா வங்கா. அவர் இறப்பதற்கு முன்பு எழுதியிருந்த குறிப்புகளின் படி, 2025 ஆம் ஆண்டு பற்றி நிறைய அச்சுறுத்தும் கணிப்புகளை சொல்லி இருந்தார். 2025 ஆம் ஆண்டில், உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் மற்றும் பிற இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்று அவர் கூறினார். அந்த இயற்கை பேரழிவுகள் பாரிய அழிவு, இறப்பு மற்றும் மக்கள் இடம்பெயர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்றும் ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தநிலையில், நேபாளம்-திபெத் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் உணரப்பட்டது. நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் இந்தியாவின் கொல்கத்தா மற்றும் சிலிகுரியிலும் உணரப்பட்டது.
இதற்கிடையில், பூகம்பத்திற்கு முன்பு, பாபா வங்கா கணிப்புகளை உடைத்துவிட்டார் என்று பலர் சமூக ஊடகங்களில் எழுதத் தொடங்கினர். 2025 ஆம் ஆண்டு உலக முடிவின் ஆரம்பம் என்று இந்த பெண் கூறியுள்ளார். புத்தாண்டில் பேரழிவு ஏற்படப்போவதற்கான பயங்கரமான குறிப்பை அவர் கொடுத்திருந்தாக சொல்லப்படுகிறது.
9/11 தாக்குதல்கள் முதல் இளவரசி டயானாவின் மரணம் வரை, செர்னோபில் விபத்து முதல் பிரெக்ஸிட் வரை பல கணிப்புகள் பாபா வங்காவுடன் பொருந்தியுள்ளன. 2025 ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் நிலநடுக்கங்கள் குறித்தும் அவர் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பார்வையற்ற பெண் 2025 ஆம் ஆண்டு பற்றி என்ன சொன்னார் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பாபா வங்காவின் மோசமான கணிப்புகள்
2025 ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும். இது போன்று பல இயற்கை அழிவுகள் பூமியை அழிக்கும் எனக் கூறியிருந்தார். 2025 ஆம் ஆண்டில், முழு உலகமும் ஒரு கொடிய போரில் ஈடுபடும் என்றும் அவர் கூறினார். இது சிரியாவின் வீழ்ச்சியுடன் தொடங்கும்.
மேற்குலகிற்கும் கிழக்கிற்கும் இடையில் பாரிய யுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. இது மூன்றாம் உலகப் போராக மாறும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த யுத்தத்தின் விளைவாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும். இதன் விளைவாக நிறைய வளங்களை இழக்க நேரிடும். மக்களின் இறப்பு வீதம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தார்.
கிழக்கில் தொடங்கிய போருக்கான விலையை மேற்கத்திய நாடுகள் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டு பூமியில் வேற்றுகிரகவாசிகள் தாக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
'பல்கேரியாவின் நாஸ்ட்ராடாமஸ்' என்கிற பாபா வாங்காவின் கணிப்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பொருந்தியுள்ளன. இவற்றில் கொரோனா தொற்றுநோய், அத்துடன் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீதான வான்வழித் தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் ஆகியவை அடங்கும். இந்த முறை நிலநடுக்கம் ஏற்பட்டதும் பாபா வங்காவின் கணிப்போடு பொருந்துவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இவர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் கூறிய கணிப்புகள் பலிக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.