அஸ்வினி நட்சத்திரம்: ‘அறிந்ததும்.. அறியாததும்.. புரிந்ததும்.. புரியாததும்’ ஜோதிடர் சொல்லும் விபரம்!
அஸ்வினி நட்சத்திர அதிபதியான கேது 10-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டாலும், அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியுடன் தொடர்பு கொள்வதாலும், மருத்துவத்துறை, ராணுவம், காவல்துறை, வழக்கறிஞர், இருப்பு சார்ந்த துறைகளில் பணிப்புரியும் வாய்ப்பு கிடைக்கும்.

ஜோதிடத்தில் நவகிரகங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதைவிட ஒருபடி மேலாக நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் பிறக்கும் நேரத்தில் சூரியனின் ஒளிகுவியல் எந்த ராசியில் விழுகிறதோ அதுவே லக்னம். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறாரோ அதுவே ஜென்ம நட்சத்திரமாகும். சந்திரனை அடிப்படையாக கொண்டே ராசியும், தசா புத்திகளும் அமைகின்றன. மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு அதிதேவதைகள் உள்ளனர். அவர்களை வணக்கினாலும், மரம், பறவை, விலங்கு பராமரிப்பதன் மூலம் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
அஸ்வினி நட்சத்திரம்:
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேதுபகவான். மேஷ ராசியில் 0 முதல் 13 பாகை 20 கலை வரை (0 - 13.20 டிகிரி) பரவியிருக்கும். அஸ்வினி நட்சத்திரத்தின் உருவ அமைப்பு குதிரை முகம் கொண்டதாக இருக்கும். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி தேவி. அஸ்வினியில் பிறந்தவர்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதும், ஆண் குதிரைக்கும், ராஜாளி பறவைக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது சிறப்பு. சிவப்பு நிறத்தை பயன்படுத்தலாம். எட்டி மரத்தை நட்டு வளர்ப்பது சிறந்த பலனை தரும்.