Astro Tips : எந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.. பித்ரு தோஷம் ஏற்பட முக்கிய காரணம் இதோ.. ஆன்மீக சொற்பொழிவார் விளக்கம்!
Astro Tips : இளமையில் அவர்கள் செய்ததற்கு அவர்களின் முதுமை காலத்தில் நாம் செய்ய வேண்டும் என்பது கடமை. இந்த கடமையை நாம் சரியாக செய்யவில்லை என்றால் நமக்கு பின் நாட்களில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என நிறைய பிரச்சனைகள் வரக்கூடும் என்று சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி அதில் தெரிவித்துள்ளார்.

Astro Tips : எந்தப் பாவத்திற்கு எங்கு போயும் பிராயச்சித்தம் தேட முடியாது. எந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று உங்களுக்கு தெரியுமா. இது குறித்து ஆத்ம ஞான மையம் youtube சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி குறிப்பிட்டுள்ள விளக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம். இந்த காணொலி கடந்த டிசம்பர் மாதம் 22தேதி வெளியாகி உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
வாழ்வில் எந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று பார்த்தால் அதில் தலையாய பாவம் என்ன என்றால் தாய், தந்தையரை வயதான காலத்தில் நிராகரிக்கின்ற பாவத்திற்கு எங்குமே பிராயச்சித்தம் உங்களால் தேட முடியாது. இன்றைய தலைமுறையினருக்கு இதை திரும்பத் திரும்ப பதிவு செய்ய வேண்டிய ஒரு தகவலாக இருக்கிறது. ஏற்கனவே இதுகுறித்து நிறைய சொல்லி உள்ளேன்.
நமது கடமை
இந்த உலகத்திற்கு நாம் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் தான் நமது தாயும்.. தந்தையும்.. இந்த தாயும் தந்தையும் இல்லாமல் நாம் இந்த உலகில் கிடையாது என்பதை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். அந்த தாய்க்கும் தந்தைக்கும் நாம் செய்ய வேண்டியது நமது கடமை. அது ஆணாக ,பெண்ணாக இருந்தாலும், பெற்றோர்களை கவனிக்க வேண்டும் என்பது நம் கடமை. நம் பெற்றோர்கள் இளமையில் நம்மை எப்படி எல்லாம் கவனித்தார்கள். அவர்கள் இளமையில் நம்மை சிறிது சோம்பேறித்தனம் அடைந்து கவனிக்காமல் விட்டிருந்தால் நாம் இந்த நிலைக்கு வந்து இருப்போமா.. நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
