Astro Tips : கோயிலுக்கு செல்லும் போது நம் வேண்டுதலை முன்வைக்க வேண்டிய இடம் எது தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்!
Astro Tips : கோயில் கொடிமரத்தின் முன் நின்று நமது வேண்டுதலை முன்வைக்க வேண்டும். உன்னைத்தான் நம்பி உள்ளேன் வேறு வழி இல்லை எனக்கு. இதை நீ கொடுத்தே ஆக வேண்டும் என்று சரணாகதி அடைவது போல் விழுந்து கும்பிட வேண்டும் என ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக நாம் கோயிலில் இறைவனை வணங்கச் செல்லும் போது நாம் நமது வேண்டுதலை எந்த இடத்தில் நின்று முன்வைக்க வேண்டும் என்று நீங்கள் யோசித்தது. உண்டா.. இது குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தனது ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியிட்டுள்ள காணொளியில் அவர் கூறிய தகவல்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
கோயில்களில் நேராக உள்ளே செல்லும்போது, ஒரு சிவன் கோயில் என்றால் ஒரு விநாயகர் சன்னதி இருக்கும். பிறகு முருகன், அம்பாள், சிவன் என்று ஒவ்வொரு சன்னதியாக இருக்கும். இப்படி ஒவ்வொரு சன்னதியிலும் சிலர் தங்களது வேண்டுதலை முன்வைப்பார்கள். சிலர் எதுவுமே வேண்டாமல் கும்பிடுவார்கள். இது அவர்களின் பக்குவப்பட்ட மனதில் வெளிப்பாடு. ஆனால் நாம் வேண்டுதலை கேட்பதில் ஒன்றும் தவறில்லை. எது வேண்டுமானாலும் கடவுளிடம் நாம் கேட்கலாம். ஆனால் அப்படி கேட்பதற்கு ஒரு ஒரு இடம் இருக்கா என்றால் நிச்சயமாக உள்ளது.
நன்றி சொல்ல வேண்டும்
அதுதான் கோயிலின் கொடிமரம். அப்படி என்றால் சன்னிதானத்தில் இறைவன் முன் நின்று நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். விநாயகர், முருகன், அம்பாள் அல்லது பிற தெய்வங்களாக இருந்தாலும் மூலஸ்தானத்தில் உள்ள பிரதான கருவறை தெய்வமாக இருந்தாலும் எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அன்றாடம் நமது வாழ்க்கையில் வாழ்வதற்கு உண்டான அனைத்து விஷயங்களும் அந்த தெய்வீக அருளால் நமக்கு கிடைக்கிறது.
