Astro Tips : கையில் மருதாணி வைக்க நல்ல நேரம் எது தெரியுமா.. எந்த நேரத்தில் மருதாணி வைப்பதை தவிர்க்க வேண்டும் பாருங்க!
Astro Tips : மருதாணி மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதை வீட்டில் வைத்து வளர்ப்பதால் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பரவும் என்ற நம்பிக்கை உள்ளது. மருதாணி மரத்தை நம் வீட்டில் எந்த ஒரு திசையிலும் நட்டு வைத்து வளர்க்கலாம். ஆன்மீக ரீதியாகவும் சிறப்பு மிக்கது.

Astro Tips : மருதாணி என்றாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் மிகவும் பிடிக்கும். பெண்களுக்கு கைகளில் மருதாணி வைத்தாலே ஒரு தனி அழகுதான். மருதாணி இலையை அரைத்து தலையில் பூசூம் போது தலையில் உள்ள நரை முடி கருமை நிறத்தில் மாற ஆரம்பிக்கும். இது இயற்கையான ஹேர்டை ஆக பலரும் பயன்படுத்துகின்றனர். உடலுக்கு குளிர்ச்சி, நகங்களுக்கு ஆரோக்கியம் தருகிறது. மருதாணி முற்றிய இலையை விட இளம் கொளுந்தாக உள்ள இலைகளை அரைத்து பூசும் போது கைகள் நன்றாக சிவக்கும். ஒரு காலத்தில் மருதாணி இலையில் உள்ள குச்சிகள் மற்றும் பழுத்த இலைகளை நீக்கிவிட்டு அம்மியில் அரைத்தனர். அதை அரைக்கும் போதே பெண்களுக்கு தனி சந்தோஷம்தான். ஆனால் இன்று பெண்கள் மிக்ஸியில் அரைத்து போட ஆரம்பித்து விட்டனர். மருதாணி இலையை அரைக்கும் போது ஓரிரு கொட்டாம்பாக்கு அல்லது சிறிதளவு அரை எலுமிச்சை சாறு அல்லது ஐந்தாறு கிராம்புகள் என்று ஏதாவது ஒன்றை மட்டும் சேர்த்து அரைத்து பூசினால் நிறம் நன்றாக பிடித்துக் கொள்ளும். இன்றைய கால கட்டத்தில் மருதாணி வைக்கும் பழக்கம் படிப்படியாக மாறி மெஹந்தி, நெயில் பாலிஷ் என மாறி உள்ளது. ஆனால் மருதாணி வைப்பது அழகுக்கு மட்டும் இல்லை. ஆன்மீக ரீதியிலும் தொடர்ப்பு உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
May 17, 2025 09:38 AMஇந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அற்புதங்கள் நடந்தே தீரும்.. கடன்களின் வலையில் இருந்து வெளியே வருவார்கள்!
May 17, 2025 07:19 AMதங்க பாதத்தில் சனி பகவான்.. எந்த 4 ராசிகளுக்கு பணத்தை கொட்டி கொடுப்பார் பாருங்க.. ஜாலியோ ஜாலிதான்!
May 17, 2025 07:00 AMகுரு - சூரியன்- சேர்க்கையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம்.. வீடு, வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு பாருங்க!
May 17, 2025 05:30 AM'தன்னம்பிக்கை முக்கியம்.. ஆசைகள் நிறைவேறுமா.. வெற்றி யாருக்கு' இன்று மே .17 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
மகாலட்சுமியின் அம்சம்
மருதாணி மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதை வீட்டில் வைத்து வளர்ப்பதால் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பரவும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் வீட்டில் அதிர்ஷ்டம் பெரும்.
மருதாணி மரத்தை நம் வீட்டில் எந்த ஒரு திசையிலும் நட்டு வைத்து வளர்க்கலாம். ஆன்மீக ரீதியாகவும் சிறப்பு மிக்கது. மருதாணியை செடியில் இருந்து பறிப்பதற்கும், கையில் வைப்பதற்கும் நேரம் என்பது மிகவும் முக்கியமானது. பொதுவாக மாலையில் விளக்கு வைத்த பின்னர் மருதாணியை செடிகளில் இருந்து பறிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களில் மருதாணி வைக்க கூடாது.