கந்த சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும்?.. விரதத்தின் சிறப்பம்சங்கள், பலன்கள் என்ன? - முழு விபரம் இதோ..!
கந்த சஷ்டி விரதம் உருவான வரலாறு, சஷ்டி விரதத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

முருகப்பெருமானுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானது கந்த சஷ்டி விரதம். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று போரில் வெற்றி பெற்ற நிகழ்வே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு முருகனின் அறுபடை வீடுகளில் 2 ஆம் வீடான திருச்செந்தூரில் நடந்தது. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களும் சஷ்டி விரத நாட்கள் ஆகும். இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
எப்படி விரதம் இருக்க வேண்டும்?
கந்த சஷ்டியின் போது இந்த ஆறு நாட்களில் சிறிதளவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் பருகி ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. காலை, மதியம், இரவு என ஏதாவது ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக்கொண்டு மீதமுள்ள 2 வேளையும் சாப்பிடாமல் விரதத்தை கடைபிடிப்பார்கள். ஆறாம் நாளான கந்த சஷ்டி அன்று முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். கடும் விரதம் இருக்க முடியாதவர்கள் முதல் 5 நாட்களும் இரவு ஒருவேளை பால் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் முழு விரதத்தை கடைபிடிக்கலாம்.
குழந்தை பாக்கியம்
குழந்தை செல்வம் இல்லாதவர்கள் முருகனை நினைத்து கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் அந்த முருகப் பெருமானே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது ஐதீகம். இதைத்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வசிஷ்ட முனிவரிடம் இருந்து இவ்விரதத்தை பற்றி அறிந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி, முனிவர்கள், தேவர்கள் என பலரும் கடைபிடித்துள்ளனர். 'செகமாயை உற்று' என்று தொடங்கும். சுவாமி மலைத் திருப்புகழில் முருகனே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்த திருப்புகழை தினமும் பாராயணம் செய்தால் நல்ல குழந்தை கிடைக்கும் என்பது ஐதீகம்.
