Aadi Perukku 2023: செல்வம் பெருக ஆடிப்பெருக்கின் போது எப்படி வழிபட வேண்டும்?
ஆடிப் பெருக்கு தினத்தன்று விரதமிருந்து அம்மனை வழிபட்டால் 16 வகையான செல்வங்களும் நம்முடைய வாழ்வில் குறைவின்றி பெருகி வரும் என்பது ஐதீகம்.

பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் வரும் மிகச் சிறப்புடைய நாளாக இந்த விழா கருதப்படுகிறது. குறிப்பாக, காவிரி பாயும் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகவும் குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டுவந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் கொண்டாடும் விழாவாக மாறியிருக்கிறது.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடிப்பெருக்கு அன்று எதை வாங்கினாலும் அது பன்மடங்காக பெருகும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. குறிப்பாக ஆடிப்பெருக்கில் சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது சிறப்பான அம்சமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு நீர்நிலைகளுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம்.
மேலும் மங்களப் பொருட்களை நீரில் விட்டு அம்பாளை பூஜிப்பதும் விசேஷமாக இருக்கிறது. இந்தாண்டு ஆடிப்பெருக்கு வருகின்ற (ஆகஸ்ட் 3, 2023) வியாழன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் இந்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆடிப்பெருக்கு அன்று முதலில் வீட்டில் பூஜை செய்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைக்க மறக்க கூடாது.
