வெவ்வேறு இடங்களில் வீரியமாக நிற்கும் கிரகங்கள்.. சூப்பர் அதிர்ஷ்டத்தைப் பெறும் 5 ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வெவ்வேறு இடங்களில் வீரியமாக நிற்கும் கிரகங்கள்.. சூப்பர் அதிர்ஷ்டத்தைப் பெறும் 5 ராசிகள்

வெவ்வேறு இடங்களில் வீரியமாக நிற்கும் கிரகங்கள்.. சூப்பர் அதிர்ஷ்டத்தைப் பெறும் 5 ராசிகள்

Marimuthu M HT Tamil Published Oct 04, 2024 08:20 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 04, 2024 08:20 PM IST

Super Luck Rasis: வெவ்வேறு இடங்களில் வீரியமாக நிற்கும் கிரகங்கள்.. சூப்பர் அதிர்ஷ்டத்தைப் பெறும் 5 ராசிகள் குறித்துக் காண்போம்.

Super Luck Rasis: வெவ்வேறு இடங்களில் வீரியமாக நிற்கும் கிரகங்கள்.. சூப்பர் அதிர்ஷ்டத்தைப் பெறும் 5 ராசிகள்
Super Luck Rasis: வெவ்வேறு இடங்களில் வீரியமாக நிற்கும் கிரகங்கள்.. சூப்பர் அதிர்ஷ்டத்தைப் பெறும் 5 ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

வெவ்வேறு இடங்களில் வீரியமாக நிற்கும் கிரகங்கள்:

ரிஷபம்:

கும்ப ராசியில் சனி, கன்னி ராசியில் புதன் மற்றும் துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், ரிஷப ராசியினருக்கு மன நிம்மதி உண்டாகும். உறவுகளில் இருந்த விரிசல்கள் நீங்கும். குடும்பப் பிரச்னைகள் தீர்க்கப்படும். வருவாய் தரும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீர்க்கப்படும். பணியில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். தொழில் மேம்படும்.

மிதுனம்:

சனி பகவான், சுக்கிர பகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் மிதுன ராசியினருக்கு இடையூறு செய்வதில்லை. மாறாக பக்கபலமாக இருக்கின்றன. இதனால் வெகுநாட்களாக சரியான வாய்ப்பு இல்லாமல் தவித்த மிதுன ராசியினருக்கு வாய்ப்புகளுக்கு மேல் வாய்ப்பு உருவாகும். கன்ஸ்ட்ரக்‌ஷன், ரியல் எஸ்டேட், மளிகைப்பொருட்கள் விற்பனை செய்வோருக்கு தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நோயாளிகளுக்கு ஆரோக்கியம் மேம்படும். வாய் வார்த்தைகளில் உண்டான சண்டைகள் சமாதானம் ஆகும்.

கன்னி:

கும்ப ராசியில் சனி, கன்னி ராசியில் புதன் மற்றும் துலாம் ராசியில் சுக்கிரன் ஆகிய மூன்றும் பயணிப்பதால் கன்னி ராசியினருக்கு தொழில் வளம் நன்கு வாய்க்கும். பணியிடத்தில் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தொழிலில் இருந்த நஷ்டம் மாறி, புதிய வாடிக்கையாளர்களால் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகளும் சரியாகும். வெகுநாட்களாக சரியான ஊதிய உயர்வு இல்லாமல் தவிப்பவர்களுக்கு நிறுவனத்தினரால் அங்கீகாரம் கிடைத்து ஊக்கத்தொகையைப் பெறுவீர்கள்.

துலாம்:

கும்ப ராசியில் சனி, கன்னி ராசியில் புதன் மற்றும் துலாம் ராசியில் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் பயணிப்பதால் துலாம் ராசியினருக்கு வெளிநாடு சென்று பயணிக்க வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் தெளிவாகத் திட்டமிட்டு உழைத்தால் பெறவேண்டிய லாபத்தைப் பெறலாம்.

மகரம்:

கும்ப ராசியில் சனி, கன்னி ராசியில் புதன் மற்றும் துலாம் ராசியில் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிப்பதால் மகர ராசியினருக்கு வாழ்க்கையில் மன நிம்மதி உண்டாகும். மகர ராசியினருக்கு இருந்த வெகுநாள் கனவு நிறைவேறும். குடும்பத்தில் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். இந்த காலத்தில் திருமண முயற்சிகள் எடுத்தால் அது நிச்சயம் நடந்தே தீரும்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.