வெவ்வேறு இடங்களில் வீரியமாக நிற்கும் கிரகங்கள்.. சூப்பர் அதிர்ஷ்டத்தைப் பெறும் 5 ராசிகள்
Super Luck Rasis: வெவ்வேறு இடங்களில் வீரியமாக நிற்கும் கிரகங்கள்.. சூப்பர் அதிர்ஷ்டத்தைப் பெறும் 5 ராசிகள் குறித்துக் காண்போம்.

Super Luck Rasis: ஒருவருக்கொருவர் பிரச்னையில்லாத கிரகங்களான சனி பகவான், சுக்கிர பகவான், புதன் பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் முழு சக்தியுடன் பயணித்து வருகின்றன. இதனால் சில ராசியினருக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் கும்ப ராசியில் சனி பகவான், கன்னி ராசியில் புதன் பகவான், துலாம் ராசியில் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் இந்த ராசிகளில் இருப்பது அபூர்வமான ஒன்று. இந்த கிரக சேர்க்கையால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
May 24, 2025 08:03 AMபண விஷயத்தில் கவனம்.. புதன் ராசி மாற்றத்தால் யாருக்கு சிக்கல் பாருங்க.. உங்கள் ராசிக்கு என்ன தாக்கம்? விவரம் இதோ!
May 24, 2025 07:30 AMகிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து பணம் கொட்டும் புதன்.. கண் குளிர வாழ போகும் ராசிகள்!
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
வெவ்வேறு இடங்களில் வீரியமாக நிற்கும் கிரகங்கள்:
ரிஷபம்:
கும்ப ராசியில் சனி, கன்னி ராசியில் புதன் மற்றும் துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், ரிஷப ராசியினருக்கு மன நிம்மதி உண்டாகும். உறவுகளில் இருந்த விரிசல்கள் நீங்கும். குடும்பப் பிரச்னைகள் தீர்க்கப்படும். வருவாய் தரும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீர்க்கப்படும். பணியில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். தொழில் மேம்படும்.
மிதுனம்:
சனி பகவான், சுக்கிர பகவான் ஆகிய இரண்டு கிரகங்களும் மிதுன ராசியினருக்கு இடையூறு செய்வதில்லை. மாறாக பக்கபலமாக இருக்கின்றன. இதனால் வெகுநாட்களாக சரியான வாய்ப்பு இல்லாமல் தவித்த மிதுன ராசியினருக்கு வாய்ப்புகளுக்கு மேல் வாய்ப்பு உருவாகும். கன்ஸ்ட்ரக்ஷன், ரியல் எஸ்டேட், மளிகைப்பொருட்கள் விற்பனை செய்வோருக்கு தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நோயாளிகளுக்கு ஆரோக்கியம் மேம்படும். வாய் வார்த்தைகளில் உண்டான சண்டைகள் சமாதானம் ஆகும்.