தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  P Chidambaram: ‘நுகர்வு குறைந்துவிட்டது.. இது இந்தியாவுக்கு நல்லதல்ல’ முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி!

P Chidambaram: ‘நுகர்வு குறைந்துவிட்டது.. இது இந்தியாவுக்கு நல்லதல்ல’ முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி!

Jan 18, 2025, 08:30 PM IST

google News
P Chidambaram : ‘நுகர்வு, உற்பத்தியை அதிகரிக்க, வரும் கூட்ட பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும், சலுகைகள் அளிக்க வேண்டும்’ (PTI)
P Chidambaram : ‘நுகர்வு, உற்பத்தியை அதிகரிக்க, வரும் கூட்ட பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும், சலுகைகள் அளிக்க வேண்டும்’

P Chidambaram : ‘நுகர்வு, உற்பத்தியை அதிகரிக்க, வரும் கூட்ட பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும், சலுகைகள் அளிக்க வேண்டும்’

P Chidambaram : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதல்வர் திறக்க உள்ள வளர் தமிழ் நூலகத்தில் 2025 ஆண்டுக்குள் 80,000 நூல்கள் வைப்பதே லட்சியம். நூல்கள் அன்பளிப்பை வரவேற்கிறோம். திருவள்ளுவர் உடையை காவியாக மாற்றியது வருத்தமளிக்கிறது. ஆளுநரை கண்டித்து பார்க்கிறோம். ஆனால் அவர் தமிழக வரலாறு, பண்பாடு திருவள்ளுவர் வரலாறு தெரியாமல் தொடர்ந்து பிழையை செய்து வருகிறார்.

ஆரியர்கள் அல்லாத ஓர் இனம் திராவிடம்

தமிழக அரசுடனான ஆளுநரின் முரண்பாட்டை ஒரு வாரத்தில் தீர்க்க வேண்டுமென்று உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டது. அரசியல் சாசன விதிகள் படி நடந்து கொள்வார் என்று நம்புகிறோம். தொடர்ந்து ஆளுநர் அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டு வருகிறார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளே உண்மையான சுதந்திரம் கிடைத்த நாள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதை கண்டிக்கிறோம். .

பெரியார் சமூக இழிவுகளை எதிர்த்தார். அதில் வெற்றியும் கண்டார். இன்றும் சமூக இழிவுகளை எதிர்ப்பது தான் பெரியார் கொள்கை. ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் பெரியாரை விமர்சித்து வாக்குகளை கேட்டால் எத்தனை மக்கள் ஆதரவாக உள்ளனர் என்பது தெரியவரும். ஆரியர்கள் அல்லாத ஓர் இனம் தான் திராவிடம். தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் சேர்ந்தது தான் அது. ஐந்து மாநிலங்களின் ஒற்றுமையை குறிக்கிறது. 

குறையும் நுகர்வு.. நாட்டுக்கு நல்லதல்ல!

திராவிட மாடல் என்று சொல்லவது தவறில்லை. திராவிடம் என்று சொல்லவதால் தமிழன் பெருமை குறைவதாக கூறுவது தவறு. தேசிய கிதத்திலேயே திராவிடம் வருகிறது. தமிழகத்தில் மது விற்பனை கூடிவிட்டதில் வருத்தப்படுகிறேன். பல மாநிலங்கள் மதுபானங்களின் ஆயத்தீர்வையை நம்பி தான் உள்ளன. மதுவிலக்கு உள்ள பீகார், குஜராத் மாநிலங்களில் எல்லோருக்கும் மது கிடைக்கிறது.

டாலர் மதிப்பு வைத்து பொருளாதாரத்தை நிலையை அளவிட முடியாது. டாலர் மதிப்பு உயர்வு பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்றுமதியாளர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். ஆனால் இறக்குமதி பொருட்களின் விலை உயரும். கருப்பொருட்களின் விலை அதிகரிக்கும். பணவீக்கமும் உயரும். இந்தியாவில் நுகர்வு குறைந்துவிட்டது. பல நிறுவனங்களின் தலைவர்களே வாங்கும் சக்தி குறைந்துவிட்டதாக கூறுகின்றனர். இது நாட்டுக்கு நல்லது அல்ல. உற்பத்தி குறையும். ஊரக பகுதிகளில் நுகர்வு அதிகளவில் குறைந்துள்ளது. 

பட்ஜெட்டில் அதை செய்ய வேண்டும்

நுகர்வு, உற்பத்தியை அதிகரிக்க, வரும் கூட்ட பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும், சலுகைகள் அளிக்க வேண்டும். புதுடெல்லி தேர்தல் காங்கிரஸூக்கு கொஞ்சம் சிக்கல் தான். அங்கு காங்கிரஸ் சில இடங்களில் கால்ஊன்றினால் மகிழ்ச்சி அடைவேன்.இண்டியா கூட்டணிக்கு தவெக வந்தால் நல்லது தான். நேரு காலத்திலும் சீனா ஆக்கிரமிப்பு செய்தது. மோடி காலத்திலும் ஆக்கிரமித்துள்ளது,’’ என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் சிதம்பரம் தெரிவித்தார். 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி