தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Fenjal Cyclone : ‘துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. அடைக்கப்பட்ட கடற்கரை’ புயல் அப்டேட் இதோ!

Fenjal Cyclone : ‘துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. அடைக்கப்பட்ட கடற்கரை’ புயல் அப்டேட் இதோ!

Published Nov 30, 2024 08:44 AM IST

இன்று பிற்பகலில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிலையில், வடதமிழக கடற்பகுதிகளில் நிலவும் சூழல் குறித்த தற்போதைய அப்டேட் இதோ!

  • இன்று பிற்பகலில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிலையில், வடதமிழக கடற்பகுதிகளில் நிலவும் சூழல் குறித்த தற்போதைய அப்டேட் இதோ!
ஃபெஞ்சல் புயல், இன்று பிற்பகலில் காரைக்கல் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. கரையை கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
(1 / 5)
ஃபெஞ்சல் புயல், இன்று பிற்பகலில் காரைக்கல் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. கரையை கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
புயல் காரணமாக மாமல்லபுரம் அதன் சுற்று வட்டார பகுதியான பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
(2 / 5)
புயல் காரணமாக மாமல்லபுரம் அதன் சுற்று வட்டார பகுதியான பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.(PTI)
சென்னை மெரினா கடற்கரை சாலை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. அதே போல, ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் பொது  போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
(3 / 5)
சென்னை மெரினா கடற்கரை சாலை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. அதே போல, ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் பொது  போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.(AFP)
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள மேம்பாலங்களில் கார்களை நிறுத்தி பாதுகாக்கும் நடவடிக்கையில் வாகன உரிமையாளர்கள் இறங்கியுள்ளனர். 
(4 / 5)
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள மேம்பாலங்களில் கார்களை நிறுத்தி பாதுகாக்கும் நடவடிக்கையில் வாகன உரிமையாளர்கள் இறங்கியுள்ளனர். (Lakshmi)
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 
(5 / 5)
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் (PTI)
:

    பகிர்வு கட்டுரை