தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  38 Years Of Padikkadavan: பட்டிதொட்டியெங்கும் மக்கள் மனம் கவர்ந்த 'படிக்காதவன்' ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் மூவி!

38 Years of Padikkadavan: பட்டிதொட்டியெங்கும் மக்கள் மனம் கவர்ந்த 'படிக்காதவன்' ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் மூவி!

Nov 11, 2023, 05:15 AM IST

google News
80களில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ரஜினியின் படங்களில் படிக்காதவன் ஒரு முக்கியான திரைப்படம் என்பதில் ஐயமில்லை.
80களில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ரஜினியின் படங்களில் படிக்காதவன் ஒரு முக்கியான திரைப்படம் என்பதில் ஐயமில்லை.

80களில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ரஜினியின் படங்களில் படிக்காதவன் ஒரு முக்கியான திரைப்படம் என்பதில் ஐயமில்லை.

இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவான படம் ரஜினியின் படிக்காதவன். கடந்த 1985ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி வெளியானது. நடிகர் சிவாஜி, ரஜினிகாந்த், நாகேஷ், அம்பிகா, ஜெய்சங்கர், ரம்யாகிருஷ்ணன் வடிவுக்கரசி, பூர்ணம் விஸ்வநாதன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமசாமி ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.

இந்த படத்தில் சிவாஜியின் மனைவியாக வடிவுக்கரசியும், ரஜினிக்கு ஜோடியாக அம்பிகாவும் நடித்திருந்தனர். இளையராஜா தனது இசையால் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்திருந்தார். ராஜா இசையில் உருவான பாடல்கள் மக்களால் கொண்டாடப்பட்டது.

கதை

படத்தில் சூழல் காரணமாக அண்ணன் தம்பிகள் பிரிந்து விடுவார்கள். வக்கீலான சிவாஜி தனது தம்பிகளின் மீது மிகவும் பாசமுடன் வளர்ப்பார். சிவாஜிக்கும் தம்பிகளும் இடையே வயது வித்தியாசம் அதிகம்.  ஒரு கட்டத்தில் சிவாஜி வடிவுக்கரசியை திருமணம் செய்வார். வேலை காரணமாக சிவாஜி வெளி ஊர் சென்றிருப்பார். அப்போது வடிவுக்கரசி தம்பிகள் இருவரையும் திட்டி வீட்டை விட்டு துரத்தி விடுவார். இந்நிலையில் அண்ணன் தம்பி மூவரும் எப்படி கடைசியாக ஒன்று சேர்ந்தனர் என்பது தான் கதை .

வெளியேறிய தம்பிகள் எப்படி வாழ்வதற்காக போராடினார்கள் என்பதை மிக உருக்கமாக படத்தில் காட்டியிருப்பார் இயக்குநர். இப்படி வெளியில் வந்தவர்கள் ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும்போது அவர்களை மீட்டு இஸ்லாமியரான நாகேஷ் இரண்டு சிறுவர்களையும் தன் சொந்தப்பிள்ளைகளோடு இணைத்து வளர்ப்பார். இந்த படத்தில் ரஜினிக்கு அம்பிகா ஜோடியாக நடித்திருப்பார். கள்ளச்சாராயம் விற்கும் அம்பிகாவை ரஜினி திட்டி திருத்துபவராக இருப்பார்.

இரண்டாவது அண்ணனான ரஜினி சுமை தூக்கி தம்பியின் பசியை ஆற்றுவார். தனது தம்பியை ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைப்பார். கடைசியாக தம்பி முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து விட்டார் என ரஜினி கொண்டாடுவார். ஆனால் உண்மையில் தம்பி ரஜினியை ஏமாற்றி இருப்பார். இதனால் மிகவும் விரக்தியில் இருப்பார். இதற்கிடையில் ரஜினியை வளர்த்த நாகேஷ் கொலை செய்யப்படுவார்.

இதற்கிடையில் ரஜினி தம்பியை ஏமாற்றி ஜெய்சங்கர் கடத்தல் தொழிலை செய்து வருவார். கடைசியாக ஜெய்சங்கர் வேதாச்சலத்தை கொலை செய்துவிட்டு அந்த பழியை ரஜினி மேல் போட்டு விடுவார்.

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் போது அண்ணன் சிவாஜி நீதிபதியாக வருவார். வழக்கு விசாரணையின் போது சிவாஜிக்கு கொலை வழக்கில் சிக்கிய ரஜினி தனது தம்பி என தெரியவரும் கடைசியில் எப்படி சிவாஜி தனது தம்பிகளை காப்பாற்றினார் என்பதுதான் கதை

ரஜினி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றதில் படிக்காதவன் படத்திற்கு ஒரு இடம் உள்ளது.

அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி, ரஜினிகாந்த் என இரண்டு லெஜண்ட்ஸ் திரையில் தோன்றி வெற்றி பெற்ற படம்

படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரஜினி குடிபோதையில் பாடுவது போல் உருவாக்கப்பட்ட ஊர தெரிஞ்சுக்கிட்டேன் பாடல் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஒரு கூட்டுக்கிளியாக பாடலை ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டு முணுமுணுத்தனர்.

ராஜாவுக்கு ராஜா நான்டா என ரஜினி கலக்கிய பாடல்கள் அணைத்தும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. இப்படி 80களில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ரஜினியின் படங்களில் படிக்காதவன் ஒரு முக்கியான திரைப்படம் என்பதில் ஐயமில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி