தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election 2024 Results: நீலகிரி, சேலம், சிதம்பரம், நாமக்கல், தொகுதிகளின் தற்போதைய நிலவரம்!

Lok Sabha Election 2024 Results: நீலகிரி, சேலம், சிதம்பரம், நாமக்கல், தொகுதிகளின் தற்போதைய நிலவரம்!

Jun 04, 2024, 11:54 AM IST

google News
Lok Sabha Election 2024 Results: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரம், நீலகிரி, நாமக்கல் சேலம் தொகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.
Lok Sabha Election 2024 Results: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரம், நீலகிரி, நாமக்கல் சேலம் தொகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Lok Sabha Election 2024 Results: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரம், நீலகிரி, நாமக்கல் சேலம் தொகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Lok Sabha Election 2024 Results:  நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரம், நீலகிரி, நாமக்கல் சேலம் தொகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.

விழுப்புரம் முன்னிலை நிலவரம்

விசிக- 50,750

அதிமுக- 44, 732

பாமக -20,498

நாதக -6301

தருமபுரி முன்னிலை நிலவரம்

நாமக்கல்

கொமதேக -43, 673

அதிமுக -43,629

பாஜக -8,867

நாதக -7519

நீலகிரி

திமுக- 69,341

பாஜக - 38,716

அதிமுக- 29,011

நாதக -7,181

பெரம்பலூர்

திமுக - 67,302

அதிமுக -22,877

ஜஜேகே -18,575

நாதக - 13,306

பொள்ளாச்சி

திமுக 33,660

அதிமுக 24,451

பாஜக 14,680

சேலம்

திமுக 74,295

அதிமுக 64, 906

பாமக 17,512

நாதக 7,426

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

களத்தில் 950 வேட்பாளர்கள்

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவிற்கு வாய்ப்பு உள்ளதா?

இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை கோவையில் களம் காண்கிறார். அதேபோல் அக்கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தர் ராஜன் தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த நிலையில் தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு மத்திய சென்னையில் போட்டியிட்டார்.

எதிர்பார்ப்பில் மக்கள்

அடுத்த 5 ஆண்டுகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆட்சி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

உலகமே உற்று நோக்கும் இந்தியாவில் ஏற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா.. பிரதமர் மோடி 3 ஆவது முறையாக ஆட்சி அமைப்பாரா.. அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இணைந்துள்ள இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.

கடும் போட்டி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி