ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயதில் அறிமுகம்.. ஆட்டமிழந்ததும் கண்ணீர்விட்ட சூர்யவன்ஷி!
Updated Apr 20, 2025 11:39 AM IST
மேற்கிந்திய ஜாம்பவான் பிரையன் லாராவை போற்றும் சூர்யவன்ஷி, , யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் 85 ரன்கள் தொடக்க கூட்டணியை உருவாக்கிய பின்னர் ஆட்டமிழந்தார், ஆனால் அவரது அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது.
ஐபிஎல் தொடரின் இளம் அறிமுக வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அபாரமான சிக்ஸர் அடித்து அசத்தினார். மொத்தம் 3 சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் விளாசினார். 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார் சூர்யவன்ஷி. தான் அவுட்டானதும் அவர் கண் கலங்கினார்.
கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடனான மோதலுக்கான அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் இடது கை வீரர் சூர்யவன்ஷி தொடக்க வீரராக வந்தார், மேலும் 181 ரன்களைத் துரத்தும் போது ஒரு இம்பேக்ட் மாற்று வீரராக இருந்தார், அங்கு அவர் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சை கூடுதல் கவரில் அடித்து நொறுக்கினார்.
ஷேன் வாட்சன் புகழாரம்
இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கூறியதாவது:
கிரிக்கெட்டில் கடினமான ஷாட்களில் ஒன்று கவர் டிரைவ். 14 வயது சிறுவனிடமிருந்து இந்த ஹிட் சர்வ சாதாரணமாக வந்தது. உங்கள் திறமையை அறிவிக்க இதைவிட வேற என்ன ஷாட் வேண்டும் என்று புகழ்ந்தார் வாட்சன்.
மேற்கிந்திய ஜாம்பவான் பிரையன் லாராவை போற்றும் சூர்யவன்ஷி, , யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் 85 ரன்கள் தொடக்க கூட்டணியை உருவாக்கிய பின்னர் ஆட்டமிழந்தார், ஆனால் அவரது அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது.
"அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது முக்கியம். அவர் வலைப்பயிற்சியில் நன்றாக பேட்டிங் செய்தார், அவரது முன் தயாரிப்பு நன்றாக இருந்தது" என்று ராஜஸ்தானின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே செய்தியாளர்களிடம் கூறினார்.
“வெளிப்படையாக கூற வேண்டும் என்றால் நாங்கள் சஞ்சுவை தவறவிட்டோம், ஆனால் அது வைபவ்வுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியது, அவர் அதை நன்கு பயன்படுத்தினார். அவர் அழகாக பேட்டிங் செய்தார். அவர் தனது தோள்களில் ஒரு கூடுதல் பொறுப்பை கொண்ட பிளேயர். கிட்டத்தட்ட 360 டிகிரி வெயில் அடிக்கிற கேம் இது. அவர் தைரியமானவர், அவரது அணுகுமுறையை நீங்கள் பார்த்தீர்கள். அவர் ஆதிக்கம் செலுத்துகிறார் மற்றும் அவரது ஷாட்களை விளையாட விரும்புகிறார். 'பந்தைப் பார், பந்தை அடி' என்பது அவரது கோட்பாடு” என்றார் சாய்ராஜ் பஹுதுலே.
சூர்யவன்ஷி நவம்பர் மாதம் லாபகரமான இருபது 20 ஓவர் லீக்கில் ஒப்பந்தத்தைப் பெற்ற இளைய வீரர் ஆனார்.
கடந்த ஆண்டு உள்ளூர் ரஞ்சி டிராபி சிவப்பு பந்து போட்டியில் அறிமுகமான இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடி 58 பந்துகளில் சதம் அடித்தார்.
ராஜஸ்தான் தோல்வி
ஐபிஎல் 2025 தொடரின் 36வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திலும் இருந்தது.