தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ஆமை வேக ஆட்டம்.. தட்டு தடுமாறிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்.. ஆர்சிபிக்கு எளிய இலக்கு

ஐபிஎல் 2025: ஆமை வேக ஆட்டம்.. தட்டு தடுமாறிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்.. ஆர்சிபிக்கு எளிய இலக்கு

Updated Apr 20, 2025 05:34 PM IST

google News
ஐபிஎல் 2025: நல்ல தொடக்கம் அமைந்தபோதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு காரணமாக அதிரடியை தொடர முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார். ஆர்சிபி பவுலர்களின் கட்டுப்பாடான பவுலிங்கால் பஞ்சாப் கிங்ஸ் 157 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது. (PTI)
ஐபிஎல் 2025: நல்ல தொடக்கம் அமைந்தபோதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு காரணமாக அதிரடியை தொடர முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார். ஆர்சிபி பவுலர்களின் கட்டுப்பாடான பவுலிங்கால் பஞ்சாப் கிங்ஸ் 157 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.

ஐபிஎல் 2025: நல்ல தொடக்கம் அமைந்தபோதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு காரணமாக அதிரடியை தொடர முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார். ஆர்சிபி பவுலர்களின் கட்டுப்பாடான பவுலிங்கால் பஞ்சாப் கிங்ஸ் 157 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 37வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே நியூ சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் கடந்த வெள்ளிக்கிழமை தான் தனது முந்தைய போட்டியில் மோதின. பெங்களுருவில் நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது. மழை காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் ஆர்சிபி தோல்வியுற்றது.

இதையடுத்து, உள்ளூர் மைதானத்தில் பெற்றி தோல்விக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் ரொமாரியோ ஷெப்பர்டுக்கு பதிலாக லயாம் லிவிங்ஸ்டன் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அதே அணியுடன் களமிறங்கியுள்ளது.

ஆர்சிபி பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ராஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாi பிரப்சிம்ரன் சிங் 33, ஷஷாங்க் சிங் 31, ஜோஷ் இங்கிலிஷ் 29, மார்கோ யான்சன் 25 ரன்கள் எடுத்தனர்.

ஆர்சிபி பவுலர்களில் க்ருனால் பாண்டியா, சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரொமாரியோ ஷெப்பார்டு ஒரு விக்கெட் எடுத்தார்.

அதிரடி தொடக்கம்

பஞ்சாப் ஓபனர்களான பிரயான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். 15 பந்துகளில் 22 ரன்கள் அடித்த பிரியான்ஷ் ஆர்யா முதல் ஆளாக அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 4.2 ஓவரில் 42 என இருந்தது. பவர் ப்ளே ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது.

பவர்ப்ளை முடிந்த அடுத்து ஓவரின் முதல் பந்திலேயே நன்றாக பேட் செய்து வந்த பிரப்சிம்ரன் சிங் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்னில் நடையை கட்டினார். பார்மில் இருந்து வரும் நேகல் வாதிரா 5 ரன்னில் துர்தஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

ஷஷாங்க் சிங், யான்சன் பார்ட்னர்ஷிப்

மிடில் ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்ட ஜோஷ் இங்கிலிஸ் 17 பந்துகளில் 29 ரன்கள் அடித்து நல்ல பங்களிப்பை அளித்தார். கடைசி கட்டத்தில் பார்னர்ஷிப் அமைத்த ஷஷாங்கி சிங் - யான்சன் ஜோடி கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தி 43 ரன்கள் எடுத்தனர்.

அதிரடியை கைவிட்டு ஆமை வேக இன்னிங்ஸ் விளையாடிய ஷஷாங்க் சிங் 33 பந்துகளில் 31 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். அவருடன் பேட் செய்த யான்சன் கொஞ்சம் அதிரடி காட்டி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடந், 25 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.