தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: கோலி, படிக்கல் அதிரடி..பஞ்சாப்பை பழிதீர்த்த ஆர்சிபி! புள்ளிப்பட்டியலிலும் முன்னேற்றம்

ஐபிஎல் 2025: கோலி, படிக்கல் அதிரடி..பஞ்சாப்பை பழிதீர்த்த ஆர்சிபி! புள்ளிப்பட்டியலிலும் முன்னேற்றம்

Published Apr 20, 2025 07:30 PM IST

google News
ஐபிஎல் 2025: கோலி, படிக்கல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தினர். முந்தைய போட்டியில் பெற்ற தோல்விக்கு பஞ்சாப்பை பழிதீர்த்த ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. (PTI)
ஐபிஎல் 2025: கோலி, படிக்கல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தினர். முந்தைய போட்டியில் பெற்ற தோல்விக்கு பஞ்சாப்பை பழிதீர்த்த ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஐபிஎல் 2025: கோலி, படிக்கல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தினர். முந்தைய போட்டியில் பெற்ற தோல்விக்கு பஞ்சாப்பை பழிதீர்த்த ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 37வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே நியூ சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திலும், ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் ஐந்தாவது இடத்திலும் இருந்தது.

பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் கடந்த வெள்ளிக்கிழமை தான் தனது முந்தைய போட்டியில் மோதின. பெங்களுருவில் நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, உள்ளூர் மைதானத்தில் பெற்றி தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது.

ஆர்சிபி அணியில் ரொமாரியோ ஷெப்பர்டுக்கு பதிலாக லயாம் லிவிங்ஸ்டன் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அதே அணியுடன் களமிறங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 157 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஸ்கோர் சேஸ் செய்த ஆர்சிபி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆர்சிபி சேஸிங்

முன்னதாக, டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ராஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 157 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை விரட்டிய ஆர்சிபி 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்து 7 பந்துகள் எஞ்சியிருக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக விராட் கோலி 73, தேவ்தத் படிக்கல் 61 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் பவுலர்களில் அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், யஸ்வேந்திரா சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

கோலி - படிக்கல் பார்டனர்ஷிப்

ஆர்சிபி அணி ஓபனர்களின் ஒருவரான பில் சால்ட் முதல் ஓவரிலேயே ஒரு ரன் எடுத்து அவுட்டானார். இதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டு ஜோடி சேர்ந்த விராட் கோலி - தேவ்தத் படிக்கல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை இலக்கை நோக்கி அழைத்து சென்றனர். பவர்ப்ளே முடிவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.

ஒரு பக்கம் கோலி பவுண்டரிகளாக அடித்து ரன்களை சேர்த்தார். மறுபுறம் படிக்க பவுண்டரி, சிக்ஸர்கள் என மாறி மாறி அடித்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது.

30 பந்துகளில் அரைசதமடித்த படிக்கல், தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்த நிலையில் ஸ்பின்னர் ஹர்ப்ரீத் ப்ரார் வசம் சிக்கினார். இம்பேக்ட் வீரராக பேட் செய்த படிக்கல் நல்ல தாக்கத்தை வெளிப்படுத்தி சென்றார்.

கோலி அரைசதம்

இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த கேப்டன் பட்டிதார் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்பின்னர் சஹால் பந்தில் அவுட்டானார். இதற்கிடையே நிதானமும், அதிரடியும் கலந்து பேட் செய்து ரன்களை குவித்து வந்த கோலி, 43 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். பெரிதாக ரிஸ்க் எடுக்காதபோதிலும் நன்றாக ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ரன்கள் குவித்து வந்தார் கோலி.

54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த கோலி தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். பஞ்சாப் அணியின் இம்பேக்ட் வீரராக பவுலிங் செய்த ஹர்ப்ரீத் ப்ரார் 4 ஓவரில் 27 ரன்கள் ஒரு விக்கெட் என நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆர்சிபி அணி, முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பெற்ற தோல்விக்கு பழிதீர்த்தது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.